ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

 à®ªà¯à®¤à¯à®¤à®¿à®¯à¯à®³à¯à®³ ஆராதனை


கர்த்தருக்குள் பிரியமானவர்களே 

பூமியெங்கும் வாழ்கிற மனிதர்களின் வாழ்கைமுறையை சற்று கவனித்து பார்த்தபொழுது, பொதுவான ஒரு சுபாவத்தை நான் கண்டேன். படித்தவர்களானாலும், படிக்காதவர்களானாலும், ஏழையானாலும், பணக்காரனானாலும், கிராமவாசியானானாலும், பட்டணவாசியானாலும், ஏன் காட்டில் வாழும் ஆதிவாசியானாலும் தங்களுக்கு மேலாக ஒரு தேவன் இருக்கிறார் என்று விசுவாசித்து, அவரை ஏதோ ஒரு முறையில் ஆராதிக்கிறார்கள். இதை யார் கற்று தந்தது என்று பார்த்தால், தேவனாகிய கர்த்தர் மனிதனை உருவாக்கினபோதே இந்த உணர்வுடன் படைத்ததால் தான் நாத்திகர்கள் கூட அவர்களின் அறிவையும், ஞானத்தையும் (அவர்களுக்கே தெரியாமல்) கடவுளாக நினைத்து நம்பி, அதற்கு கீழ்படிந்து தொழுது கொள்ளுகிறார்கள். ஆனால் ஒருவரும் தாங்கள் செய்வது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை. தங்கள் முன்னோர் சொன்னதை அப்படியே நம்பி செய்கின்றனர்.  

              தேவனுடைய பெரிதான கிருபையால் கிறிஸ்துவை ஆராதிக்கிற நாம் உண்மையாக இந்த உலகத்தை படைத்த தேவனை ஆராதிக்கிறோம். ஆனால் நம்முடைய ஆராதனை முறை சரியா, தவறா என்று எப்படி அறிந்து கொள்வது...? நம் வாழ்கையில் எதையும் சரியானதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தேவனுடைய வார்த்தையை கொண்டு தான் அறிய முடியும். 

               à®ªà®°à®¿à®šà¯à®¤à¯à®¤ வேதத்தில் ரோமர் 12: 1 வசனம் சொல்கிறது; 

"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான, ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை."

பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுல் முலமாக நமக்கு கற்றுதருவது, மேற்கண்ட வசனத்தின்படி நம் ஆராதனை இல்லையென்றால் அது தேவனுக்கு பிரியமில்லாத, நமக்கும் பிரயோஜனமில்லாத ஆராதனை ஆகும். ஞாயிறுதோறும் திருசபைக்கு போய் பாடிவிட்டு வந்துவிட்டால் அது முழுமையான  à®†à®°à®¾à®¤à®©à¯ˆà®¯à®¾à®•à®¿à®µà®¿à®Ÿà®¾à®¤à¯. நம்முடைய  à®†à®°à®¾à®¤à®©à¯ˆà®¯à®¿à®²à¯ நம்மை

1.பரிசுத்த பலியாக படைத்திருக்க வேண்டும். 

2.பிரியமான பலியாக ஒப்பு கொடுத்திருக்க வேண்டும்.  

3.ஜீவ பலியாக அர்பணித்திருக்க வேண்டும்.

பரிசுத்த பலி

பரிசுத்தம் என்றால் என்ன? பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவனுக்கு  à®•à¯Šà®£à¯à®Ÿà¯ வரும்  à®ªà®²à®¿ பழுதற்றதாக, குறைவில்லாததாக இருக்க வேண்டும். நாம் வாழும் புதிய ஏற்பாட்டின் காலத்தில் வெளிபுற தோற்றம் முக்கியமில்லை. ஆனால்  à®¨à®®à¯à®®à¯à®Ÿà¯ˆà®¯ உள்ளம் பரிசுத்தமாக இருக்க வேண்டும். பிறமதத்தினர் முறைபடி வெளியில் நன்றாக குளித்து, மாமிசம் சாப்பிடாமல் இருப்பது சுலபம். ஆனால் உள்ளத்தை தூய்மையாக வைத்து கொள்வதே கடினம். அப்படியென்றால் எப்படி பரிசுத்தமாவது..? அதற்கு தான் தேவன், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவபட்டு, பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் வந்தால், உள்ளம் உடல் ஆவி மூன்றும் பரிசுத்தமாகி விடும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உள்ளத்தில் இல்லாமல், பரிசுத்த பலியாக நம்மை படைக்க முடியாது.

பிரியமான பலி

வேதம் சொல்கிறது விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்; எபிரேயர் 11:6. ஆதாமும் ஏவாளும் தங்கள் பிள்ளைகள் காயின்,  à®†à®ªà¯‡à®²à¯à®•à¯à®•à¯ ஆராதிக்க கற்றுதந்தனர். ஆனால் தேவன் ஆபேலின் பலியை மடாடுமே அங்கீகரித்தார்; ஏன் காயினின் பலியை ஏற்கவில்லை. ஆண்டவருக்கு காய்கனிகள் பிடிக்காதா..? அப்படியல்ல.., எபிரேயர் 11:4 ல் வேதம் சொல்கிறது விசுவாசத்தினாலே ஆபேலின் பலி காயினின்  à®ªà®²à®¿à®¯à¯ˆ காட்டிலும் மேன்மையானதாக கருதப்பட்டது. ஆதலால் நாம் எப்போதெல்லாம் ஆராதிக்க கூடுகிறோமோ, அங்கே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்பதை விசுவாச கண்களில் பார்த்து, விசுவாசித்து  à®ªà®¯à®ªà®•à¯à®¤à®¿à®¯à¯à®Ÿà®©à¯ தொழுது கொள்ள வேண்டும். அதுவே தேவனுக்கு பிரியமான பலியாகும்.

ஜீவன்னுள்ள பலி  

முதல் இரண்டு காரியமும் அதிகமாக ஆவி மற்றும் ஆத்துமாவை பற்றியது. ஜீவபலியாக என்று சொல்லும் போது, அது ஆவியின் பரிசுத்தமும்,  à®†à®¤à¯à®¤à¯à®®à®¾à®µà®¿à®©à¯ விசுவாசமும், சரீரத்தில் கிரியையினாலே வெளிப்படும் போது தான் அது ஜீவனுள்ள பலியாக மாறுகிறது. நாம் உலகத்தில் வாழுகிற வாழ்கை கிறிஸ்துவின் பரிசுத்தத்தையும், நாம் அவர்மேல் வைத்துள்ள விசுவாசத்தை கனிதரும் வாழ்வின் மூலமாக  à®µà¯†à®³à®¿à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®¾à®µà®¿à®Ÿà¯à®Ÿà®¾à®²à¯, நாம் ஜீவனில்லாத கிறிஸ்தவராகி விடுகிறோம். கிரியையில்லாத விசுவாசம் செத்தது (யாக்கோபு 2:26) என வேதம் சொல்கிறது. எப்படி ஆவியின் கனியை மாமிசத்தில் தருவது?  à®¨à®®à¯ ஆண்டவர் தாமே சொன்னார்; 

"நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." யோவான் 15:5. அவர் வார்த்தையை அனுதினம் தியானித்து அதன்படி வாழ்ந்தால் நாம் கனிதரும் ஜீவபலியாக முடியும்.

கர்த்தருக்குள் பிரியமானவர்களே கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு ஆராதனை வேறு, வாழ்க்கை வேறு. அது மாய்மாலமான ஆராதனை. ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற நமக்கு ஆராதனை நம் அன்றாட வாழ்வில் ஆரம்பித்து திருசபையில் கூடி தேவனை தொழுது கொள்ளும் போது முடிகிறது. நம்முடைய ஆராதனை புத்தியுள்ளதா..? புத்தியில்லாததா....?

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்.

1 கொரிந்தியர் 2 :15 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved