கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அளவிட முடியாத அன்பினாலும், கிருபையினாலும் பிரசவித்த இவ்விணையத்தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவையே நாடுங்கள். கொலேசெயர் 3:2
மேற்குறிப்பிட்ட வேத வசனத்தின்படி. உலக சினேகிதம் கொள்ளாமல், நம்மை உண்டாக்கியவரும், நமக்காக தம் ஜீவனையே கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக்கொண்டவருமான அவருக்கு நன்றியுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் வாழ்வதோடு நின்றுவிடாமல், அவருடைய உள்ளத்தின் வாஞ்சையை நிறைவேற்றுகிற பிள்ளைகளாக,
அவருடைய இராஜ்ஜியம் கட்டப்பட அவருக்கு (இயேசுக்கிறிஸ்துவுக்கு) பணி செய்வதே எமது ஊழியத்தின் பிரதான தரிசனம்.
அந்த பணியின் ஒரு பகுதி தான் இவ்விணையத்தள வெளியீடு.மேலும் ...
எங்கள் சேவைகள்
2023
கர்த்தரின் பெரிதான கிருபையால் 11-01-2021 அன்று இயேசுவின் கரம் பணியால் பதின்மூன்றாவது வீடாக யாழ்பாணத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டது.
1
தற்போதைய தேவைகள்
அத்தியாவசிய தேவையுள்ளோரின் தகவல்களை இப்பகுதியில் தெரியப்படுத்துவேம். உதவி செய்ய விரும்புவோர் எங்களுடன் தொடர்பு கொண்டால் முழு தரவுகளையும், ஆலோசனையும் தருவோம்.அத்தோடு எமது பணிமுடிந்துவிட்டது. நீங்களே தேவையுள்ளோரை தொடர்பு கொண்டு பணத்தை அனுப்பி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது உங்களுடைய நற்கிரியை, உங்களுடைய ஊழியம், உங்களுடைய தரிசனமாகவே இருக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி,உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16