ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

சரீர உயித்தெழுதல்


"மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்கள்

என்று ஒருவன் சொல்வானாகில்"

 

வேதாகாமத்தில் சரீர உயித்தெழுதல் முக்கியமான ஒரு உபதேசமாகும் அது மரித்தோரிலிருந்து ஒருவனுடைய சரீரத்தை தேவன் உயிரோடு எழும்புவதையும்,

இடைநிலையில் அதுபிரிந்து வந்து அந்த மனிதனின் ஆத்துமாவோடும் ஆவியோடும் மறுபடியும் இணைவதையும் குறிக்கிறது.

 

சரீர உயிர்த்தெழுதல் ஏன் தேவையானது? என்பதற்கு வேதாகாமம் மூன்று காரணங்களை வெளிப்படுத்துகிறது. மனிதனின் மொத்த ஆள்தத்துவத்திற்கு சரீரம் முக்கியமானது. சரீரம் இல்லாமல் மனிதர் முழுமையாகமாட்டார்கள். கிறிஸ்து அருளும் மீட்ப்பு சரீரம் உட்பட முழு மனிதனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக் கொண்டிருக்கிறது.

அதென்னவென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே அந்த சிருஷ்டியானது சுய இஸ்டத்தினாலே அல்ல கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்கு கீழ்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்கு தெரிந்திருக்கிறபடி இதுவரைக்கும் சர்வசிருஷ்டியும்  à®à®•à®®à®¾à®¯à¯à®¤à¯ தவித்து, பிரசவ வேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல் ஆவியின் முதற்பலன்களையும் பெற்ற நாமும் கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் வருவதற்கு காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம்.

 

அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல. ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்புகிறோமானால். அது வருகிறதை பொறுமையோடே காத்திருக்கிறோம்.

“வெள்ளிக் கயிறு கட்டு விட்டு பொன் கிண்ணி நசுங்கி ஊற்றின் அருகே சால் உடைந்து. துவாரத்தண்டையில் உருளை நொருங்கி இவ்விதமாய் மண்ணினது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததர்கு முன்னும் அவரை உன் வாலிப பிராயத்திலே நினை”

பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம்! நம் சரீர உயித்தெழுதல் கிறிஸ்துவினுடைய உயித்தெழுதலின் உண்மையினால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவர் இங்கே இல்லை தாம் சொன்னபடியே உயித்தெழுந்தார் கர்த்தரை வைத்த இடத்தில் வந்து பாருங்கள். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார் அதிலே அவர் தாம் குறித்திருக்கிற மனுசனைக் கொண்டு பூலோகத்தை நீதியால் நியாயம் தீர்ப்பார்: அந்த மனுசனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப்பண்ணுவார். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க. மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?.

 

மரித்தோரில் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையோ கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசங்கம் விருதா? உங்கள் விசுவாசமும் விருதா? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக் குறித்துச் சாட்சி சொன்னதினாலே தேவனுக்காக பொய்ச் சாட்சி சொல்கிறவர்களாகவும் காணப்படுவோம்.மரித்தோர் உயிர்த்தெளாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை கிறிஸ்து எழுந்திராவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும் நீங்கல் இன்னும் பாவத்திலே இருந்திருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.

 

இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தால் எல்லா மனுசரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம்.

கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து எழுந்து நித்திரை அடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயித்தெழுதலும் உண்டாயிற்று ஆதமுக்குள் எல்லோரும் மரிக்கிறது போல கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனான கிறிஸ்து பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

 

விசுவாசியின் உயித்தெழுந்த சரீரம் ஆண்டவரின் உயித்தெழுந்த சொந்த சரீரத்தைப் போல் காணப்படும்.

 

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறாகும் பொருட்டு தேவன் அவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். கிறிஸ்து தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்காகத் திரும்பி வரும்போது இன்னும் உயிரோடிருக்கும் உண்மையுள்ள விசுவாசிகள் உயிர்த்தெழுதலின் நாளுக்கு முன்னர் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அடையும் அதே சரீர மறுரூபத்தை அவர்களும் அடைவார்கள். அந்த நேரத்தில் மரித்தோரிலிருந்து உயிரோடெலும்பியவர்களுக்குக் கொடுக்கும் சரீரங்களுக்கு ஒத்த விதமாய் புதிய சரீரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படும்.

அவர்கள் ஒரு போதும் சரீர மரணத்தை அனுபவிக்க மாட்டார்கள்.

 

 

 

எழுத்துருவாக்கம்:- j.ஜனனி

சபை:- பெனியேல் அற்புத சபை

முகவரி:- கல்லப்பாடு முல்லைத்தீவு

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved