ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

பரதேசி 


எகிப்த்து தேசத்தில் யோசேப்பு அதிபயாயிருந்த நாட்களில். யாக்கோபு தனது குடும்பத்தினரோடு எகிப்த்து வந்து சேர்ந்தார். மகன் யோசேப்பு தகப்பன் யாக்கோபை எகிப்த்து ராஜாவான பார்வோனிடம் அழைத்துச் சென்றார். அந்த வேளை பார்வோன் யாக்கோபை நோக்கி உமது வயது என்ன என்று கேட்டான். அதற்கு யாக்கோபு நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசுநாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுக்கு சொன்னான். ஆதியாகமம் 47:9

யாக்கோபின் பதில் அவரின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையை சொன்னார். நான் நாடிருந்தும் நாடற்றவனாய் (பரதேசியாய்) வாழ்கிறேன். அவர் சொல்வதன் பொருள் பரலோக வாசியான நான் தற்காலிகமாக இந்த பூமியில் இருக்கிறேன் என்பதாகும்.

இவ்வாறு சொல்வதற்கு யார் இந்த யாக்கோபு?

1. ஈசாக்கை தகப்பனாகவும், ஆபிரகாமை தாத்தாவாகவும் கொண்டவர்.

2. முதல் முதல் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இழையவன்.

3. ஏசாவிடமிருந்து சேஷ்ட புத்திர பாகத்தை எடுத்துக்கொண்டவர்.

4. ஈசாக்கிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டவர்.

5. ஏசாவுக்கு பயந்து ஓடிப்போன வேளை சொப்பனம் காணுகின்றார். அதில்-

நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின்   தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய   கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். இவ்வாறு வாக்குப்பெற்றவர்.

அந்த இடத்துக்கு பெத்தேல் என்று பெயர் வைத்தார்.

6. ராகேலுக்காக 14 ஆண்டுகள் ஊதியமற்று கடினமாக வேலை செய்தவர்.

7. லாபான் 10 தடவை அவரது சம்பளத்தை மாற்றினான்.

8. இஸ்ரவேல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டவர்.

9. இரவு தொடங்கி விடிய வரை போராடி ஜெபித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டவர்.

   à®…ந்த இடத்துக்கு பெனியேல் என பெயர் சூட்டியவர்.

இவ்வாறு அநேக காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளான யாக்கோபிடம் கொஞ்சமேனும் பெருமையில்லை. அவருடைய முற்பிதாக்கள் தேவனோடு சஞ்சரித்தவர்கள். இன்னும் சொல்லப் போனால் இந்த பூமி கர்த்தருக்கு சொந்தம் அந்த செந்தக்காரர் ஆபிரகாமுக்கு கானான் தேசத்தை உறுதி போட்டு குடுத்துவிட்டார். (ஆதியாகமம் 13: 15,17. நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.) 

இந்த நில உடமை ஈசாக்குக்கும் சொந்தம். ஈசாக்குக்கு சொந்தமானது யாக்கோபுக்கும் சொந்தம். ஆனால் அதை உரிமைபாராட்டவில்லை.

அநித்தியமான இந்த உலக வாழ்க்கைய உணர்ந்த பிள்ளைகளாய் அவர்கள் வாழ்ந்தார்கள். பரத்தை நோக்கி பார்த்து நித்திய வாழ்க்கையில் தேவனோடு வாழ ஆசையாக இருந்தார்கள். அதற்கு அடையாளமாக கூடாரத்திலேயே வாழ்க்கையை கழித்தார்கள். அசையா ராஜ்ஜியத்தின் பிள்ளையாகிய யாக்கோபு அழிவுள்ள ராஜ்ஜத்தையுடைய பார்வோனுக்கு தான் ஒரு பரதேசி எனக்கூறி, அவனை ஆசீர்வதித்தார்.

ஐந்து ஆகமங்களை எழுதிய மோசே தனது முதல் பிள்ளைக்கு கொர்சேம் (பரதேசி) என பெயர் வைத்தார்.

மலைப்பிரசங்கத்தில் இயேசுக்கிறிஸ்த்து இவ்வாறு சொன்னார்-மத்தேயு 6:19,20

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

 à®ªà®°à®²à¯‹à®•à®¤à¯à®¤à®¿à®²à¯‡ உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

என் அன்புச் சகோதரர்களே நீங்கள் எந்த ராஜ்ஜியத்துக்குரியவர்கள்? அநித்தியமான உலகவாழ்க்கையை வெறுத்து நித்திய வாழ்க்கையை தேடுகிறீர்களா? அசைவுள்ள ராஜ்ஜியங்களுக்கு ஆசைப்படாமல் அசையா ராஜ்ஜியத்தில் இடம்பிடித்துக் கொள்ள

ஆசைப்படுகிறீர்களா?

நன்றி கர்த்தாவே.

த.பிரபா.

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved