ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா....?


இருந்தால், ஆயிரகணக்கான கடவுள்களை தொழுகிற உலகத்தில்.....,

யார் உண்மையான கடவுள்.....?

இப்படி பலபேர் கேள்வி கேட்டு பதில் கிடைக்காத காரணத்தால் கடவுள் என்று ஒருவர் இல்லை என்பதை அநேகர் நம்பி வாழுகின்றனர். நாம் கொஞ்சநேரம் இந்த கேள்விகளுக்கான பதிலை அலசி பார்க்கலாமா...?

கடவுள் இருக்கிறார் என்பதையோ அல்லது இல்லை என்பதையோ தர்க்கஙகள், வாக்குவாதங்கள் வைத்து நிரூபிக்க முடியாது. ஏனென்றால் இது வார்த்தை ஜாலம் நிறைந்த உலகம். பேச்சு திறமை உள்ளவன் எப்படியாவது பேசி தான் சொல்வது தான் சரி என்று காரியங்களை மறைத்துவிடலாம். ஆனால் சிருஷ்டி கர்த்தராகிய கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்களாக அவர் சிருஷ்டித்த பூமியும் அதின் ஜீவராசிகளும், (மனிதர்களாகிய நாமும்) வானமும் அதிலுள்ள சூரியன் சந்திரன் நட்சத்திரம் போன்ற கோடான கோடி கிரகங்களும் வாழ்கின்றன.

இவைகள் எப்படி ஆதாரமாகும்...? 

பரிசுத்த வேதாகமம் இந்த கேள்விகளுக்கு பதில் தருகிறது.

ஒருநிமிடம் வானத்தையும் அதிலுள்ள கோடான கோடி கிரகங்களையும் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பாதையில், குறிப்பிட்ட வேகத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இவைகளெல்லாம் தானாக உருவாகி, தானாகவே தங்களை ஒழுங்கு பாதையில் நடத்தி கொண்டிருக்கின்றன என்று சொன்னால் நம்பமுடியுமா...?  

இந்த ஒழுங்கமைப்பை உருவாக்கி, இத்தனை காலமாக நடத்திவருகின்ற நபர் தான் நாம் ஆராதிக்கவேண்டிய கடவுள் எனறால் நம்பமுடிகிறதா..?

இன்னும் ஒன்றை நான் சொல்லட்டும். படிப்பறிவில்லாத, நாகரீகம் அறியாத காட்டு வாழ் ஜனங்கள் கூட, அவர்கள் அறியாத கடவுள் என்பவருக்கு, அவர்களுக்கு தெரிந்த முறையில் தொழுகை செய்கின்றனர். இந்த கடவுளை தேடும் உணர்வு எப்படி வந்தது. யார் தந்தது..? 

இதைதான் பரிசுத்தவேதம் சொல்கிறது. 

1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. 

2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. 

3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப் படுவதுமில்லை. 

4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது. சங்கீதம் 19 :1-4

இதுவரை படித்ததை யோசிக்கையில் பாதி மனசு ஒருவேளை கடவுள் என்னும் சிருஷ்டி கர்த்தர் இருக்கலாம் என தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் அடுத்த கேள்விக்குள் செல்லலாம். இது மிக சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கும் என நம்புகிறேன்.

யார் உண்மையான கடவுள்...?

600 கோடிக்கும் அதிகமான ஜனங்கள் வாழும் இந்த பூமியிலே, கோடிகணக்கான பெயர்களை நபர்களை தெய்வமாக மனிதர்கள் தொழுது கொள்கின்றனர். ஒவ்வொரு தேசத்திலும் பற்பல ஜாதி மதத்திற்கு ஏற்றவாறு அநேக கடவுள்கள் இருக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு அல்லா கடவுள். இந்துக்களுக்கு முன்னூற்று முப்பது கோடி தெய்வங்கள் உள்ளனர். அதையும் தாண்டி மிருகங்கள், பறவைகள், மரங்கள், சூரியசந்திர நட்சத்திரங்கள், மனிதர்கள் என எல்லாவற்றையும் தெய்வங்களாக பார்ப்பவர்கள் இந்துகள். கிறிஸ்துவர்களுக்கு சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்துவே தெய்வம். இப்படி இங்கே சொல்லபடாத அநேக தெய்வங்கள் உள்ளனர். இந்த உலகில் உள்ள எல்லாகடவுள்களின் தன்மையை ஒப்பிட்டு பார்த்த போது ஒரு முக்கிய உண்மை தெரியவந்தது. இயேசு கிறிஸ்துவை தவிர, கடவுள் என்ற பெயரில் வந்த மற்றவரெல்லோரும் பாவிகளையும், துன்மார்க்கர்களையும் அழிக்கவே கூறுகின்றனர். கிறிஸ்து இயேசு ஒருவர் மட்டுமே "துன்மார்கனுடைய சாவில் எனக்கு பிரியமில்லை", அவன் மனந்திரும்பி இனி நீதிமானாக "வாழ்வதே பிரியம்" என்று கூறியுள்ளார். 

இப்படி யார் சொல்லக்கூடும். பெற்ற தாய் தந்தை தவிர யாரும் இப்படி நினைக்கமாட்டார்கள். கர்த்தராகிய கிறிஸ்து இயேசு நம்மை ஆவியில் பெற்றெடுத்த தாயும்தந்தையுமானவர்.

இதை சற்று ஆழமாக ஆராயலாமென பரிசுத்த வேதத்தை படித்து பார்த்த போது அதில் கிறிஸ்துவை பற்றி கிடைத்த சில சத்தியங்களை இங்கே தியானிக்கலாமா...!

"துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." எசேக்கியேல் 18 :23

1. இயேசு கிறிஸ்து மட்டுமே மனிதன் இந்த உலகத்தில் எப்படி வாழவேண்டும் என வாழ்ந்து காட்டினார்.

எனக்கருமையானவர்களே தயவு செய்து பின்வரும் வாக்கியத்தை தவறாக எடுத்து கொள்ளவேண்டாம். கடவுளின் பெயரில் மனிதர்களாக இந்த பூமியில் அவதரித்தவர்களில் நல்ல வாழ்கையை வாழவேண்டுமென போதித்தவர்களில் இயேசு கிறிஸ்துவை தவிர, மற்ற எல்லாரும் தாங்கள் போதித்ததை தாங்களே வாழ முடியவில்லை. இயேசுகிறிஸ்து மட்டுமே எல்லாவித துன்பம், பிரிவு, துயரம், வேதனை துக்கங்களை நமக்கு கற்று கொடுக்கவிரும்பி, அனுபவித்து அதனூடாக போகும்போது எப்படி வெற்றியுள்ள வாழ்கை வாழ்வது என்பதை வாழ்ந்து காட்டினார். அவரை பின்பற்ற கற்று தந்தார். இது தான் ஒரு அன்புள்ள தகப்பன் தன் பிள்ளைக்கு நடக்க, ஓட, வாழ வார்த்தையில் மட்டுமல்லாமல் வாழ்ந்து கற்று தந்த பாசமாகும்.

2. இயேசு கிறிஸ்து மற்றவர்களுடைய ஜீவனை எடுக்க வராமல், தம்முடைய ஜீவனை நமக்காக கொடுக்க வந்தார்.

கடவுள் என்றபெயரில் இப்பூமிக்கு வந்தவர்களில் இயேசுகிறிஸ்துவை தவிர (புத்தன் தன்னை கடவுளாக கூறவில்லை) மற்ற அனைவரும் வந்ததன் காரணம்:  à®¤à¯à®©à¯à®®à®¾à®°à¯à®•à®®à®¾à®• வாழ்ந்தவர்களை அழித்து நீதிமான்களாக வாழ்பவரை காப்பாற்றவே என்பது உலகமறிந்த உண்மை. அல்லாவை கடவுளாக ஏற்று கொள்ளாதவரை கொன்றால் தவறில்லை என இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இயேசுகிறிஸ்து மட்டுமே அவரை சிலுவையில் கொன்றவரையும் மன்னிக்கவேண்டுமென மரிக்குமுன் சொன்னார். பாவிகளை இரட்சித்து நீதிமான்களாக்கவே இப்பூமிக்கு வந்தேன் என்றார். 

இது தான் அன்பு நிறைந்த தந்தையின் உள்ளம்.

3. இயேசு கிறிஸ்து நம் பாவங்களை மன்னிக்க மறித்தது மட்டுமல்லாமல், நம்மோடு இருந்து பாவத்தை ஜெயிக்க வைக்க உயிரோடு எழுந்தார்.

கடவுள் என்கிற பெயரில் இந்த பூமிக்கு வந்த எல்லோரும் மரித்து அடக்கம் பண்ணபட்டார்கள். அவர்களில் அநேகர் இன்னும் கல்லரையில் எலும்புகளாக இருக்கிறார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து தம் சீஷர்களுக்கும், இன்னும் அநேகருக்கும் தம்மை வெளிபடுத்தினார். இதை குறித்து 2 குற்றசாட்டுகள் உள்ளன. 

1. இஸ்லாமியர்கள் இயேசுகிறிஸ்து மரிக்கவேயில்லை, பின் எப்படி உயிர்த்தெழமுடியும் என்கின்றனர். 

2. யூதர்கள் அவர் சரீரத்தை சீஷர்கள் திருடிக்கொண்டு போய் உயிரோடு எழுந்துவிட்டார் என பொய் சொல்கிறார்கள் என்றனர். 

வாக்குவாதத்திற்காக இயேசுகிறிஸ்து மரித்தார் என வேதம் தவறாக எழுதிவிட்டது என வைத்துகொண்டால், தண்டனை தந்த ரோமருடைய பதிவும் பொய் சொல்கிறதா.? இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிப்பதை பார்க்கும் வரையில் அந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என நின்ற யூதர்களின் பதிவும் பொய் சொல்கிறதா..? இது சரித்திரம். இயேசுகிறிஸ்து மரித்ததை ஊர்ஜிதபடுத்திய கிளவுதியஸ் என்ற நூற்றுக்கதிபதி, பின்பு உயிரோடு எழுந்தவரை பார்த்து கிறிஸ்வனானான்.

2. யுதர்கள் சொல்கிறபடி இயேசுவின் சரீரத்தை சீஷர்கள் திருடியது உண்மையாயிருந்தால், பர்திலேமேயுவை உயிரோடு தோலை உரிக்கும்போது, அந்திரேயாவையும் பேதுருவை தலைகீழாக சிலுவையில் போடும்போதும், தோமாவை ஈட்டியில் குத்தும்போதும், யோவானை கொதிக்கும் எண்ணையில் போடும் போதும் இயேசுகிறிஸ்து உயிரோடு எழவில்லை என சொல்லி உயிர் தப்பியிருப்பார்கள். தங்கள் உயிரை சந்தோஷத்துடன் கொடுக்க வைத்த வல்லமை தான் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமை. பொய்சாட்சிக்காக யாராவது மரிப்பார்களா...?

அருமையான நண்பரே

நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்த ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து, உங்களை நேசிப்பதால், நீங்கள் உண்மையான தெய்வத்தை அறிந்து ஆராதிப்பதால் வரும் பரலோக ஆசீர்வாதத்தை பெறவேண்டுமென விரும்புவதால் உங்களை இந்த கைபிரதி மூலம் தேடி வந்திருக்கிறார். அவரை நீங்கள் உள்ளத்தில் ஏற்று கொண்டால் என்னோடு இணைந்து பின்வரும் சிறிய ஜெபத்தை இருதயத்திலிருந்து சொல்வீர்களா..?

அன்பள்ள இயேசு சவாமி, நீர் என்னை படைத்த சிருஷ்டிகர்த்தர் என்பதையும், எனக்காக இந்த பூமிக்கு மனிதனாக வந்து, என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தீர் என்பதையும் நான் நம்புகிறேன். என் இருதயத்தில் வந்து என்னை உம் பிள்ளையாக மாற்றும். என்னோடு கூடவே இரும். ஆமென். 

எழுத்துருவாக்கம் ஜோன் கிரிராஜ்   

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved