ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

விடைபெற்றுச் சொல்லும் 2017.


இரண்டாயிரத்து பதினெழின் இறுதி மாதத்தின் கடைசி நாட்களில் வந்து நிற்கிறோம். புதிய ஆண்டில் நுழைவுக்காக பரவசத்தோடு காத்து நிற்கிறோம்.

வருடங்கள் முடிவதும் தொடங்குவதும் இயல்பான ஒன்றே. ஒரு ஆண்டுக்குரிய நாட்களில் தேவனுக்கு பிரியமாய், தேவ நோக்கத்தை நிறைவேற்ற எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியமானதொன்று. இந்த ஆண்டின் கடைசி நாட்களில் எங்களை குறித்து நாங்களே தற்பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. தேவன் செய்த நன்மைகளை நினைவு கூர்ந்து அவருக்கு நன்றி சொல்வதேடு, வருகிற புதிய ஆண்டில் அவர் பெலத்தோடு தேவநோக்கம் நிறைவேற்ற வாழ்வோமென ஆவியில் உறுயேடுத்தல் நலமானதே.

இந்த ஆண்டில் ஆண்டவர் செய்த நன்மைகளை வாயால் சொல்லவோ, எழுது கோலால் எழுதி முடிக்கவோ முடியாது. அவை நமது அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை. ஆனால் உச்சக்கட்டமாக பெற்றுக்கொண்ட உதவியை அல்லது மீள முடியாதென நினைத்த நமது சக்திக்கு அப்பாற்பட்டு நடந்த பல சம்பவங்களை மீள நினைவுபடுத்திப் பார்த்து கர்த்தருக்கு நன்றி சொல்வது அவசியமானதொன்று. 

இந்த ஆண்டு என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை மனத்தாழ்மையோடு எழுதுகிறேன். சுய விளம்பரத்துக்காகவோ அல்லது கர்த்தர் எனக்கு உதவி செய்தார் என்பதை தம்பட்டம் அடிப்பதற்காகவோ அல்லது மற்றவர்களைக்காட்டில் மேலான உதவியை பெற்றேன் என்பதற்காகவும் அல்ல. 

இக்கதையில் எனது அவிசுவாசமும் பெலவீனமுமே அதிகமாக வெளிப்படுகிறது, ஆனாலும் தேவனின் மாறாத அன்பும் குறையாத கிருபையும் மேலோங்கி நிற்கிறது. 

இதை வாசிக்கும் நீங்கள் என்னைக்காட்டிலும் அதிக நன்மைகளை உதவிகளை ஆண்டவரிடமிருந்து பெற்றிருப்பீர்கள், அவற்றை மீள நினைவுபடுத்தி உளமார, உணர்வுபூர்வமாய் நன்றி சொல்லி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம். 

ஆகஸ்ட் மாத இறுதியில் எனது வயிற்றில் லேசான வயிற்றுநோ உண்டாயிற்று. ஒவ்வொரு ஆண்டும் இப்படி நோ வருவதும் ஓரிரண்டு வாரங்களால் சுகமடைவதும் வழக்கமாயிருந்தது. ஆகவே ஆரம்பத்தில் வலிக்குரிய மாத்திரைகளை உட்க் கொண்டேன், இரண்டு வாரம் கழித்தும் மாறுவதாய் தெரியவில்லை, மாறாக நோ அதிகரித்து வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. வைத்தியரிடம் சொன்ற வேளை அவர் இரத்தம், மலம், உடற் கூறுகளை கதிர்வீச்சைக் கொண்டு நுட்பமாய் ஆராய்து பார்க்க (scan) எழுதித் தந்தார்கள். அத்தோடு குடல் புண்ணுக்குரிய மாத்திரையும் எழுதித்தந்தார்கள். அதிக மன அழுத்தத்தின் மூலம் குடலில் அமிலங்கள் சுரப்பதாலும், நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமையாலும் ஏற்பட்ட நோ என வைத்தியர் சொன்னார்.

இப்பொழுது ஒரு மாதம் கடந்து இரண்டாவது மாதத்துக்குள் நுழைந்தாகி விட்டது. வேலையில் அதிக கவனம் செலுத்தமுடியாமல் மதியத்தில் மாத்திரை எடுத்து தூங்குவது. வயிற்று நோவால் குனிந்து வேலை செய்ய முடியாது, பாரம் தூக்க முடியாது, படுத்து விட்டு இடது புறமோ வலது புறமோ திரும்பமுடியாது. சீராக சாப்பிடுவதும் இல்லை. வீட்டில் பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் எல்லாம் பார்த்து முடிந்தாயிற்று. ஓரிரவு தாங்க முடியாத நோவால் வைத்தியசாலைக்கு சென்றேன் அவர்களும் பல பரிசோதனைகளைச் செய்து விட்டு மாத்திரை எழுதித் தந்தார்கள். அந்த மாத்திரைக்கும் சரியாக வரவில்லை. மீண்டும் வைத்தியரிடம் சென்றேன், அவர் இரத்தம், மலம் போன்றனவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. வயிற்றுப் புண்ணுக்குரிய மாத்திரையை மாற்றித் தருவதாக சொன்னார். இப்பொழுது அப்பாட ஒரு வாரத்தில் மாறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அம்மாத்திரக்கும் மாறவில்லை. வைத்திய சாலையில் ஸ்கானுக்கு 06/11 நியமனம் கிடைத்தது. இப்பொழுது ஒக்டோபர் இரண்டாவது வாரத்துக்கு வந்தாச்சு. கார் கூட ஓட்ட முடியாத நிலை உருவாகி விட்டது. ஒருதடவை வேலையில் கணமான ஒரு பொருளை தூக்கி விட்டு தூக்க முடியவில்லையே என அழுத சம்பவமும் உண்டு. இதற்கு மேல் பொறுக்க முடியாது, ஏதோ பொல்லாத வியாதி வந்து விட்டது போல என நினைத்தாலும். இரத்தம். சலம், மலம் போன்றனவற்றில் ஒன்றுமில்லை என்று சொன்னதே ஆறுதலளித்தது. மீண்டும் வைத்தியரிடம் போன போது சி.ரி. ஸ்கான் 

(ct scan) காசு கட்டி தனியார் மருத்துவ மனையில் எடுக்கும் படி எழுதித்தந்தார்.

சி.ரி ஸ்கான் எடுப்பதற்கு அடுத்த நாளே எடுப்பதற்கு அனுமதி கிடைத்தது. இதை எனது நண்பரிடம் தெரிவித்தேன். அவரும் வைத்திய சாலையில் வேலை செய்கிறார். இவை குறித்து அவருக்கு அனுபவங்கள் உண்டு. அந்த நண்பர் கேட்டவுடன் பதட்டத்தோடு ஏன் சி.ரி ஸ்கான் எழுதித்தந்தார்? இரத்தம் எப்போது பரிசோதித்தது என பல கேள்விகளைக் கேட்டார். என்னுடைய நலன் விரும்பி என்பதால், அவருடைய கேள்விகள் எனக்கு பயத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. இத்தோடு நண்பர் நிப்பாட்டியிருந்தால் பறுவாயில்லை. அவர் நானிருக்கும் இடத்திற்கு வரவேண்டுமாயின் மூன்று மணித்தியாலங்கள் பயணம் செய்ய வேண்டும். நண்பர் நாளை தானும் வருவதாகவும் வைத்தியசாலையின் விலாசத்தை அனுப்பிவிடும்படியும் கேட்டுக்கொண்டார். 

இதற்கு பிற்பாடு நான் பயத்தின் உச்சக்கட்டத்துக்கே போய் விட்டேன். அழுது ஜெபித்தேன், சரியாக சாப்பிடவில்லை. வீட்டுக்காறருக்கு பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை.

அவர்களும் நான் வியாதியால் அவதிப்படுவதால், எனது முகபாவனையை வைத்து எந்த ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை. இரவிரவாக துக்கமில்லை நான் ஏதோ மரணப் படுக்கையில் படுத்திருப்பது போலவே அச்சப்பட்டேன். தீராத வியாதி வந்திருப்பவன் எப்படிச் சிந்திப்பானோ. அப்படியே நானும் சிந்தித்தேன். பிள்ளைகளுக்கு சேமிப்பில் பெரிய தொகை பணம் பேடாமல் விட்டது பெரிய பிழை என்று நினைதேன். பிள்ளைகளின் முகம் தான் என்நினைவுக்கு வந்து வந்து சென்றது. வேதத்தை திறந்து வைத்து இரண்டு வரி வாசிப்பது, பின்னர் ஜெபிப்பது, அதன்பின் யோசிப்பது இவ்வாறாக அதிகாலை 2 மணிக்கு வந்தாச்சு. படுக்கை அறையை விட்டு வெளியே வந்து கனணியை திறந்து, இணையத்தளத்தில் வறிற்று நோ குறித்த தகவல்கள் எல்லாம் ஆராய்தேன். நான் முழுமையாக குழம்பிப் போயிருந்தேன், ஆண்டவர் முன்னிலையில் தேவனுக்கும் மனிதருக்கும் விருப்பமற்ற காரியங்களைச் செய்திருந்தால் மன்னியுங்க எனச் சொல்லி, ஒரு முழுமையான தற்பரிசோதனைக்குள் சொன்று ஆண்டவரோடு ஒப்புரவானேன். எல்லாம் தேவ சித்தம் என்று சொல்ல முடிந்ததே தவிர அதை ஜீரணிக்க முடியவில்லை. அதிகாலை 5 மணிக்கு பிற்பாடே மீண்டும் படுக்கை சென்றேன். மீண்டும் காலை 6.30 க்கு நடை பிணம் போல் எழும்பினேன். வழமையாக எனது கைத்தொலை பேசிக்கு வேத வசனங்கள் வரும். அன்று காலை 6 மணிக்கு வந்த வசனம் ஆச்சரியப்பட வைத்தது. 

நீதிமொழிகள் 18:10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். இதை வாசிக்கும் பொழுது நம்பிக்கை வந்தாலும், மூடநம்பிக்கை உள்ள மனுஷனைப் போல் சிந்திக்கிறேன் என உணர்தேன். ஏதோ சாதாரணமாய் வருவது போல இன்றும் வந்துள்ளதென நினைத்துக் கொண்டேன். (ஒருவேளை இயேசுக் கிறிஸ்துவே நேரடியாய் வந்து சொல்லியிருந்தாலும் நான் நம்பும் நிலையில் அன்றில்லை)

இந்தப் பரிசோதனை மூலம் விரும்பத்தாக முடிவுகள் வந்தால் என் குடும்பத்தினர் குழம்பி விடுவார்கள். ஆகவே இலங்கையில் குறை வேலையாக நிற்கும் பணிகளுக்கு முழுமையான பணத்தை அவரவர் வங்கிக்கு மாற்றி விடும்படி குறுஞ் செய்தி இலங்கைக்கு அனுப்பிவைத்தேன். இலங்கையில் இருக்கும் போதகர் மாருடனும் பேசி விட்டுச் சென்றேன். 

நானும் மகளுமாக பயணித்தோம். வழியில் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். வைத்தியசாலையில் சென்ற கொஞ்ச நேரத்தில் நண்பரும் வந்து சேர்ந்தார். அவர் வைத்திய அதிகாரிகளுடன் பேசினார். றிப்போட் ஒரு நாள் செல்லும், ஆனால் இறுவெட்டு (cd) தருவதாக சொன்னார்கள். நண்பர் அதுவே போது மென்றார். ஸ்கான் எடுக்கப்பட்டு இறுவெட்டும் தந்தார்கள். அவசர அவசரமாக வீடு வந்து நண்பர் போட்டுப்பார்த்து விட்டு எதுவுமே இல்லை என்று சொன்னார். அப்பொழுது தான் கொஞ்சம் பயம் குறைந்தது. நண்பர் ஒருவேளை என்னை திருப்திப்படுத்த பொய் சொல்லுகிறார என்ற சந்தேகம் எனக்கிருந்தது. இரவு கூடி ஜெபிக்கும் பொழுது உண்மை வெளிப்படும் என்று நினைத்து, இரவு ஜெப வேளை அவரிடமிருந்து வரும் வார்த்தையை உன்னிப்பாக கவனித்தேன். நம்பிக்கை தரும் வகையில் நன்றி சொல்லி அவர் ஜெபித்தார். 

இன்று சனிக்கிழமை, லண்டனைச் சேர்ந்த ஒரு போதகரின் மனைவி ஊழியத்தின் நிமிர்த்தம் சுவிஸ் நாட்டுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து இலங்கை ஊழியம் குறித்து பேசுவதற்காக அழைப்பேடுத்திருந்தார்கள். (முன்னர் இந்த சகோதரி என்னை வீடு தேடி வந்து ஜெபித்து விட்டுச் சென்றிருந்தார்கள்.) பேசத் தொடங்கியதும் வயிற்று நோ குறித்தே கேட்டறிந்தார்கள். நான் மகிழ்ச்சியாக முதல்நாள் நடந்தவற்றை விலாவாரியாக சொன்னேன். அவர்கள் மறு கரையில் இருந்து சொன்னார்கள் “தம்பி நீ ஆண்டவருக்காக நிறையக்காரியம் செய்திருக்காய் உன்னை கர்த்தர் கைவிடமாட்டார்” எனச் சொன்னார்கள். அவர்கள் திடப்படுத்தியதற்க்கு நன்றி சொன்னாலும். தேவனுக்கு பணி செய்வதால் காப்பாற்றுவார் என்பதை நான் நம்பவில்லை. என்னைக்காட்டில் அநேக பரிசுத்தவான்கள் வியாதியால் மரித்திருக்கிறார்கள். ஆதி அப்போஸ்தலர்கள் அநேகர் இரத்த சாட்சியாய் மரித்தார்கள். இவர்களோடு ஒப்பிடும் போது நானெல்லாம் ஒரு பெருட்டல்ல. ஒரு மனிதனின் வாழ்வோட்டம் முடிந்து விட்டதேன கர்த்தர் நினைத்தால் அவர் எடுத்துக் கொள்ளுவார். அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது.

திங்கட்கிழமை அதே சகோதரி உபவாசம் இருந்து ஜெபிப்பதாக சொன்னார்கள். அன்று மாலை 3.45 மணி போல் டாக்டர் வந்து பார்க்கும்படி அழைப்பு வந்தது. உடனடியாக சென்று பார்தேன் ஸ்கான் முடிவு வந்திருந்தது. சரீரத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை சிறுநீரகத்தில் 4mm சிறிய கல்லு மட்டும் உள்ளதென எழுதப்பட்டிருந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவன் அற்புதகரமாய் வியாதியை குணப்படுத்தி றிப்போட்டில் எந்த அறிகுறியும் இல்லை எனச் சொல்லவைத்தமைக்கு.

மீண்டும் வைத்தியசாலையில் 06/11/2017 அன்று ஸ்கான் பண்ணினார்கள். 10 ம்திகதி எனது வயிற்று நோ பூரணமாக குணமாகியது. கடைசியாக எடுத்த ஸ்கானிலும் ஒன்றுமில்லை எனச் சொன்னார்கள். 

பிரியமானவர்களே!

இதை வாசிக்கும் பொழுது உங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக தோன்றும். மூன்று மாதகாலமாக வியாதியால் உபாதைப்பட்டதை ஒரு சிலர் விசுவாசக் குறைவால் வந்ததாகச் சொல்லலாம். இன்னொருதர் நோயை சரியாக இனம் காணாததால் பிரச்சனை நீடித்ததாக சொல்லலாம், சரீரத்தை சீராக பராமரிக்கதால் வியாதிப்பட்டதாகவும் சொல்லலாம், இரகசிய பாவத்தின் மூலம் தேவன் அனுமதித்ததாகவும் சொல்லலாம், தேவ நாம மகிமைக்காக வியாதிப்பட்டதாகவும் சொல்லலாம். 

ஆனால் நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய சுயம் சாக கர்த்தர் அனுமதித்தார் என.

1) நான் என்னுடைய சுய பெலத்தில் இல்லை என்பதை கற்றுத்தருவதற்கு வியாதியை அனுமதித்தார்.

சாதாரண கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளையே எதிர்கொள்ள முடியாத ஆளுமையற்றவன் தான் மனிதன். அவனுடைய அறிவு, ஆற்றல், ஆளுமையால் எல்லாவற்றையும் பெற்றுவிடமுடியாது, இறப்பையும் வென்றுவிட முடியாது. தன்னுடைய பெலத்தால் வெற்றி பெற்றதாகச் சொன்னாலும். அவை தேவனிடமிருந்து கிடைத்தவையே என்பதை பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளுவதில்லை.

கிறிஸ்தவர்களாகிய எங்களுடைய வாழ்வில் பெருமைக்கோ ஆவிக்குரிய மேட்டிமைக்கோ இடம் கொடுக்கக் கூடாது. இதுவே தேவன் எங்களுக்குள் வாசம் செய்து இயக்குவதற்கு தடையாக உள்ளது.

என்னிலொன்றும் இல்லை எல்லாம் தேவனால் உண்டானதென்ற புரிதலோடு செயல் படும் பொழுதே, தேவன் எங்களுக்குள் வாசம் செய்வார். 

அநேகர் என்னிலொன்றுமில்லை என பகிரங்கமாக விளம்பரத்துக்கு வாயறிக்கை செய்வார்கள். நடைமுறை ஜீவியத்தில் அதைக் காண்பதரிது.

உண்மையில் நான் தாழ்மையாகவே ஜீவித்தேன். ஆனாலும் கர்த்தர் இப்போதிருப்பதைக் காட்டிலும் இன்னும் அதிக தாழ்மையை எதிர்பார்க்கிறார் போல். இப்போதிருப்பதைக் காட்டில் முழுமையாக தேவனைச் சார்ந்த வாழ்வை எதிர்பார்க்கிறார் போல்.

கர்த்தருடைய பார்வை வித்தியாசமானது. 

ஏசாயா 55:8 ல் என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகள் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

2) எங்களுடைய வாழ்வில் அவர் துருகமாய் உள்ளார். 

உடல் உளநிலையில் அசௌகரியங்களைச் சந்திந்தாலும். ஜீவியம் இயல்பாகவே ஓடியது. சத்துருவின் தாக்குதல்களிலிருந்து தப்புவிக்க தேவன் மதில்போல், பெரும் சுவர் போல் நின்று கிரியை செய்தார். 

மூன்று மாதம் கஷ்ரப்பட்டாலும் இறுதியில் சுகம் தந்தார்.

3) சரீரத்தை சீராக பராமரிக்க வழிவகுத்தார். போதியளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும், உரிய நேரத்துக்கு உணவுண்ணும் பழக்கத்தை கடைப்பிடிக்க பழக்கப்படுத்திக் கொண்டேன்.

இதை விட வேறு காரணங்கள் இருக்க கூடும். அது கர்த்தருக்கே வெளிச்சம். 

மீண்டும் புதுப் பெலத்தோடு டிசம்பர் மாதத்திலிருந்து தேவனுக்கு பணிசெய்ய ஆவியானவர் உற்சாகப்படுத்தினார். 

சத்துரு அழிந்தது முடிந்தது என்பான்,

என்மீட்பரோ இல்லை முடிவல்ல இது தொடக்கமென்பார், 

முன்னைவிட அதிகமாக ஓடுவதற்கே.

வாழ்வது ஒரு வாழ்க்கை, இருப்பது ஓர் உயிர் என்னை மீட்டுக்கொண்டவருக்கே அவையிரண்டும் காணிக்கை.

கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

சகோதரன் த.பிரபா

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved