ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

தேவாலயத்திலும் பெரியவரை வரவேற்ற சிமியோன் தாத்தா.


தேவாலத்திலும் பெரியவர் முதல் தடவையாக தேவாலயம் சென்றார் என்ற தலைப்பும் இன்றைய தியானத்துக்கு பொருத்தமானது. இயேசுக்கிறிஸ்துவானவர் மனுஷீக பெற்றோருக்கு பிள்ளையாக பிறக்காமல், கன்னியாகிய மரியாளின் வயிற்றில் பரிசுத்தாவியானவரின் பெலத்தால் கர்ப்பந்தரித்து கடவுளுடைய பிள்ளையாக மண்ணுலகில் அவதரித்தார். கடவுளே சரீரமாக பூமிக்கு வந்திருந்தார் என்று சொல்வதே மிக மிகச் சரியானது. அவர் பரிசுத்தமானவர், திருத்துவத்தின் இரண்டாம் நபர், அவரே வணக்கத்துக்குரியவராயிருக்கிறார். ஆகவே அவர் ஆலயத்தைவிட பெரியவராயிருந்தார். திரித்துவ தேவன் நம்மீது கொண்ட அன்பினால் அக்கறையால் மனுஷீக அவதாரம் எடுத்தார். மனுஷனாய் பிறந்த போதும் அவருடைய தெய்வீகநிலை மாறவில்லை. இதைப் புரிந்து கொள்வதற்கு யோவான் சுவிஷேசப் புத்தகத்தை ஆழமாக தியானிக்க வேண்டும். தேவன் ஒரு போதும் தேவனாக இல்லாமல் இருக்கமுடியாது. நம்நிமிர்த்தம் இயேசுக்கிறிஸ்த்து பூமிக்கு மனுஷனாக வரவேண்டியிருந்தது. அவர் பூமியில் அவதரித்த போதும், பிதாவுடனான பிரிக்கமுடியாத உறவை, தெய்வீகத்தை ஒருபோதும் இழந்துவிடவில்லை. இதுவே திரித்துவத்தின் இரகசியமாகும். 

லூக்கா 2:21-39 வசனங்களில் குழந்தை இயேசுவின் முதல் ஒன்றரை மாத கால சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளது. குழந்தை இயேசு என்றதும் இன்றைக்கும் அப்படியே இருக்கிறார், அவரை அதே நிலையில் வைத்து தியானிப்பது வணங்குவது தவறானது. 

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் தேவனாகவில்லை. அவ்வாறு உருவாகவும் முடியாது. தேவன் எப்பொழுதும் தேவனாகவே இருக்கிறார். எனவே புனிதர்கள் என மனிதர்களை வணங்குவதை தவிர்க்க வேண்டும்.

தீர்க்கதரிசனம் நிறைவேறும்படியாக, ராஜாவின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிந்து பெத்லகேம் வந்த யோசேப்பும் மரியாளுக்கும் பிள்ளை இயேசு பிறந்தபடியால் (வந்த) அவ்வூரிலேயே தங்கிவிட்டார்கள். அவர்கள் உடனடியாக நாசரேத்தூர் திரும்பிப் போகவில்லை. அதற்கு பிரதான காரணம் ஒன்றிருந்தது. பேறுகாலத்தின் பின்னர் அப்பிள்ளைக்கு தேவாலயத்தில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றவேண்டியிருந்தபடியால் பெத்லகேமிலே தங்கிவிட்டார்கள். பெத்லகேமுக்கும் எருசலேமுக்கிடையிலான தூரம் ஆறு மைல் ஆகும். 

யோசேப்பும் மரியாளும் கர்த்தரின் சட்டதிட்டங்களையும், நாட்டை ஆளும் ராஜாவின் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்கும் பொறுப்புள்ளவர்களாயிருந்தார்கள்.

1. பிள்ளை பிறந்து எட்டாம் நாள் விருத்தசேதனம் செய்யப்பட்டு பெயரிட்டார்கள்.       

   (லேவியராகமம் 12:3)

2. தாயார் 33 நாட்கள் சுத்திகரிப்பு நிலையில் இருந்தார்கள். (லேவி 12ம் அதிகாரம்)

3. முதற் பேறான ஆண்பிள்ளையை கர்த்தருக்காக ஒப்புக்கொடுக்க முன்வந்தார்கள்.          

   (யாத் 13:12)

4. தேவாலயத்தில் பாவநிவாரண பலி செலுத்த புறாவோடு சென்றார்கள். (லேவி 12:8)

இன்று ஒரு போதகரிடம் மேல் சொல்லப்பட்ட நான்கு காரியங்களையும் நாங்கள் ஏன் கடைப்பிடிப்பதில்லை என்று கேள்வி கேட்டால், அவர் சொல்லுவார்; அவர்கள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நியாயப்பிரமாணக் காலத்தில் வாழ்ந்தபடியால் அவற்றைக் கடைப்பிடித்தார்கள் என்றதோடு, இன்று நாங்கள் புதிய உடன்படிக்கையின் கீழ் கிருபையின் காலத்தில் வாழ்வதால் அவற்றைக் கடைப்பிடிக்க தேவையில்லையென எடுத்துச்சொல்லி, வேதத்திலிருந்தும் மேலதிக ஆதாரங்களைக் காட்டி விளக்கம் தருவார். அவர் சொல்வதில் எந்த தவறுமில்லை, சரியான மறுமொழியே தந்துள்ளார். அதே போதகர் சபையில் நியாயப்பிரமாணக் காலத்து தசம பாகத்தை தரும்படி கேட்டு பிரசங்கிப்பதைக் காணக்கூடியதாயிருக்கும். தசமபாகத்தில் (பணத்தில்) மட்டும் ஏன் முரண்படுகிறார்கள் என்பதற்கான பதிலை நீங்களே கண்டுபிடியுங்கள். 

எல்லா போதகர்களும் அவ்வாறு கேட்பதில்லை பிரசிங்கப்பதில்லை,

யோசோப்பின் கையில் புறாவும், மரியாளின் கையில் குழந்தை இயேசுவையும் தாங்கியபடி இருவரும் மகிழ்ச்சியாக தேவாலயம் வந்தார்கள். அவர்கள் நாற்பது நாட்கள் கழித்து குழந்தை இயேசுவோடு தேவ பிரசன்னம் நிறைந்த இடத்துக்கு சென்றதானது முதலாவது மகிழ்ச்சியாகும். எல்லாக் கடமைகளையும் முடித்த பிற்பாடு நாசரேத்தூர் போவதாக திட்டமிட்டு சென்றார்கள். இது இரண்டாவது பெரிய மகிழ்ச்சியாகும். இவற்றையெல்லாம் கடந்து தேவாலயத்தில் யோசேப்பையும் மரியாளையும் மகிழ்ச்சியூட்டும்படியாக ஆச்சரியப்படும்படியாக இரண்டு நபர்கள் காத்திருந்தார்கள்.

1. சிமியோன்.

தேவாலயத்திலும் பெரியவர் முதல் தடவையாக மாம்ஷீகத்தில் தேவாலயம் வருகை தந்த போது வயது முதிர்ந்த சிமியோன் தாத்தா வரவேற்றார். சிமியோன் என்ற பெயருக்கு “கேட்டல்” என்ற அர்த்தமாகும். அவர் நீதியும் தேவபக்தியுள்ளவராயும் இருந்தார். ஆங்கில வேதாகமத்தில் நீதிமான் என எழுதப்பட்டுள்ளது. தேவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் நீதியாக வாழ்வதில்லை. நீதியாய் வாழ்பவர்கள் எல்லோரும் தேவபக்தியோடும் வாழ்வதில்லை. அன்று தேவாலயத்தில் தேவபக்தியுள்ள பரிசேயர் சதுசேயர் வேதபாதகர் என பல பக்திமான்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் நீதிமானாய் இல்லை. இன்றும் இதை சபைகளில் காணக்கூடியதாய் உள்ளது. நீதியின்பால் வாழாத அநேகர் மார்க்க காரியங்களில் ஈடுபடுகிறார்கள். நீதியாய் வாழ்வது பிரதானமானது. தேவன் எப்படி பிறரைப் பார்ப்பரோ அதே பார்வையே நீதிமானுக்கும் இருக்கும். தான் பக்திமான், பரிசுத்தவான், நீதிமான் என உண்மையான ஒரு நீதிமான் தன்னைத்தானே எண்ண மாட்டான். தனது பாவங்களை ஒப்புக்கொண்டு பாவிகளை நேசித்து தேவ சித்தம் செய்து, வாழ்க்கையின் அனைத்துப் பகுதியிலும் உண்மையுள்ளவனே நீதிமான். 

நீதியும் பக்தியும் அவசியமானது அவ்விரண்டும் உள்ள சிமியோனிடமே பரிசுத்த ஆவியானவர் இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே சிமியோனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆதியாகமம் 5:22-27ல் மெத்தூசலாவைக் குறித்து வாசிக்கலாம். இவரின் தந்தை ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்த நபராவார். ஏனோக்கு மெத்தூசலா என பெயரிட்டதன் பொருளானது ‘’இவன் மரித்ததும் பெருவெள்ளம்’’ வரும் என்பதாகும். மெத்தூசலாவின் இறப்பின் பின் பெரிய அழிவை உலகம் கண்டது. உலக இரட்சகரை (மீட்பரை) கண்ட பின்னரே மரிப்பாய் என சிமியோனுக்கு அறிவிக்கப்பட்டதானது அவருக்கு மிகப்பெரிய கனமாகும். 

ஒவ்வொரு மனைதனையும் ஒவ்வொரு விதமாய் ஆண்டவர் வழிநடத்துகிறார். அவரின் வழிநடத்தல்கள் ஆச்சரியமானவை.

லுக்கா சுவிஷேசப்புத்தகத்தை எழுதிய வைத்தியனாகிய லூக்கா அன்றைய காலத்தில் வாழ்ந்த பலரை விசாரித்து காரியங்களை ஆராய்ந்து அறிந்தே லூக்கா சுவிஷேசத்தை எழுதியிருக்கிறார். கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து இயேசுவின் தாயாரிடம் கேட்டு அவற்றை பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதியிருக்கிறார். சிமியோன் குறித்த காரியங்களை மரியாளிடமிருந்தே கேட்டுத்தெரிந்து கொண்டிருக்க கூடும். 

சிமியோன் மரணத்துக்கு முன்பே கிறிஸ்துவை காண்பாய் என்று சிமியோனுக்கு ஏன் சொல்லப்பட்டது? 

மேய்ப்பர்களுக்கு தேவதூதர்களால் அறிவிக்கப்பட்டது போல் சிமியோனுக்கு ஏன் அறிவிக்கப்படவில்லை. ஞானிகள் கிறிஸ்துவை தேடிவந்த போது ஒரு நட்சத்திரம் வழிநடத்தியது போல ஏன் சிமியோனை வழிநடத்தவில்லை. மாறாக ஆலயத்திற்கு சிமியோனை அனுப்புவதற்கான காரணம் தான் என்ன? 

இதே ஆலயத்தில் பல நாட்களாக இஸ்ரவேலுக்கு இரட்சகர் தேவை என அவர் மனப்பாரத்தோடு ஜெபித்திருக்கலாம். பாவத்திலிருக்கும் மக்களை மீட்டு அவர்களுக்கு ஆறுதலளிக்க ஆண்டவர் மனுஷனாய் வரவேண்டும் என ஜெபித்திருப்பார் என நான் கருதுகிறேன்.

முன்பின் தெரியாத யோசேப்பு மரியாள் குழந்தை இயேசுவை எப்படி ஆலயத்தில் சிமியோன் இனம்கண்டிருப்பார்? 

முதலாவது ஒளியாகிய தேவனை துணியால் சுற்றியிருந்தாலும் அவரில் மகிமை வெளிப்பட்டிருக்கும். சாதாரண கண்களுக்கு தெரியாதிருந்தாலும். சிமியோனுக்கு மேல் இருந்த பரிசுத்த ஆவியானவர் இனம் காட்டியிருப்பார். 

இரண்டாவது யோசேப்பு மரியாளின் தாழ்மையும், எளிமையும், கண்ணியமும் சிமியோனுக்கு இனங்காட்டியிருக்கும். எல்லோரும் பகட்டுக்குக்கு பந்தாவுக்கும் காணிக்கை கொண்டு வந்தார்கள். இவர்கள் இருவரும் மனப்பூர்வமாக சந்தோஷமாக காணிக்கை கொண்டுவந்தார்கள். மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலிருந்த மிகப்பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா? 

யோசேப்பின் கையில் இருந்த புறா அவர்களின் பாவத்துக்கான பலியாகும், மரியாளின் கையில் இருந்த குழந்தை (இயேசு) ஒட்டுமொத்த உலகத்தின் பாவ நிவாரண பலியாகும். பாவநிவாரண பலியாக போகிற இயேசுவையே ஆலயத்தில் நின்ற சிமியோன் வரவேற்று பிள்ளையை கையில் வாங்கி, அவரை எந்தியபடி ஸ்தோத்திரம் செலுத்தினார். அதன் பின் ஜெபித்தார், பிதாவாகிய தேவன் தனக்கு சொன்னபடி செய்துவிட்டதாக சொன்னார். இஸ்ரவேலருக்கு மீட்பர் வந்துவிட்டதால் தான் சமாதானமாக மரிக்கப் போவதாக அறிக்கையிட்டார். இருளுக்குள் இருக்கும் புறஜாதியினரின் வாழ்க்கையில் ஒளிவீசுவதற்கும், இஸ்ரவேல் மக்களுக்கு மகிமையும் உண்டாக போவதாக சொன்னார். இவற்றையெல்லாம் கேட்கும் போது யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்த சிமியோன் முப்பத்தி மூன்றரை ஆண்டுகளின் பின் நடக்கப்போகும் சம்பவத்தையும் அவர்களுக்கு முன்னறிவித்தார். அதில் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் ஊடுருவிப் போகும் என மரியாளைப் பார்த்து சொன்னதானது, இயேசுவின் கோராமான சிலுவை மரணத்தை முன்னறிவிப்பதாக இருந்தது. 

இத்தோடு சிமியோன் தாத்தாவின் பணி நிறைவு பெற்றது.

2. தீர்க்கதரிசியாகிய அன்னாள்.

வேதத்தில் அநேக அன்னாள்கள் உண்டு. தேவாலயத்திலிருந்த இந்த அன்னாள் தீர்க்கதரிசியாக இருந்தார். திருமணமாகி ஏழு ஆண்டுகளே குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருந்தார். அதன் பின்னர் விதவையாகவே வாழ்ந்தார். இயேசுக்கிறிஸ்து முதல் தடவையாக தேவாலயம் வந்த பொழுது அன்னாளுக்கு வயது எண்பத்தி நாலாகும். அன்னாள் தேவாலயத்தை விட்டு வெளியே போகாது இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தார்கள். 

சிமியோன் இயேசுக்கிறிஸ்துவை ஆசீர்வதித்து சென்ற பின்னார் அன்னாள் அங்கு வந்து கர்த்தரைப் புகழ்ந்து அங்கிருந்தவர்களுக்கு அவரைக்குறித்து பேசினாள்.

அன்னாள் தீர்க்கதரிசி என்பதால் கர்த்தருடைய ஆவியை உடையவராயிருந்தார். அவளும் உபவாசித்து ஜெபம் பண்ணி ஆராதனை செய்து தேவ உறவில் நிலைத்திருந்த பெண்மணி என்பதால், இயேசுக்கிறிஸ்து இரட்சகர் என்ற வெளிப்பாட்டை பெற்றிருந்திருப்பார். தேவாலயத்தில் தரிந்திருந்ததால் யோவான் ஸ்நானகனின் தந்தை சகரியாவுக்கு நடந்த சம்பவங்களையும், யோவான் ஸ்நானகனின் பிறப்பின் பின்னர் பிள்ளைக்குரிய கடமைகளை நிறைவேற்ற ஆலயம் கொண்டுவந்திருந்த பொழுது, பெற்றோராகிய சகரியா எலிசபேத்தை சந்தித்து அப்பிள்ளை குறித்த காரியங்களையும் அறிந்திருப்பார்கள். 

இந்த சம்பவங்களெல்லாம் அன்னாளுக்கு இரட்சகரின் வரவு நெருங்கிவிட்டதை வெளிப்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன்.

பிரியமானவர்களே!

இயேசுக்கிறிஸ்து பூமிக்கு வரவேண்டும் என காத்திருந்த சிமியோன் போல, இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாங்கள் இன்று காத்திருக்கவேண்டும். அதற்காக ஜெபித்து ஊக்கமாக பணிசெய்ய வேண்டும்.

ஆலயத்தில் அநேக ஆன்மீகவாதிகள் இருந்த பொழுதும் கர்த்தர் சிமியோனை தெரிவு செய்வதற்கான காரணம், அவர் நீதியும் தேவபக்தியும் உள்ளவராயிருந்தார். இவ்விரண்டு குணநலன்களைக் கொண்டவர்களாய் நாமிருக்கிறோமா? 

சிமியோன் ஆரவாரம் ஆர்ப்பாட்டமில்லாமல் இரட்சகரை வரவேற்று கையில் ஏந்தி நன்றி சொல்லி ஜெபித்து ஆசீர்வதித்து அமைதியாக கடந்து சென்ற தாழ்மையை தான் என்னவென்று சொல்வது!!! 

அன்னாளுக்கு ஏழு வருட குடும்பவாழ்க்கைதான் அதன் பின் விதவையாகிவிட்டார்கள். அன்னாளோ தன்னுடைய வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என கர்த்தரை கேள்வி கேட்காமல், குறைகூறமால், முறுமுறுக்காமல் அவருடைய பிரசன்னைத்தையே தேடி தேவாலயத்தில் வாழ்ந்தார்கள். 

அன்னாளுக்கு குடும்பமில்லாதபடியால் அவருடைய உபவாசம் ஜெபம் போன்றன பிறருக்கானதாகவே இருந்திருக்கும். 

வயசு போய் தாள்ளாடும் நேரத்திலும் தேவனுக்கு உபயோகமான பாத்திரமாய் இருந்தார்கள். நற்கிரியை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல. 

சரீர பெலனுள்ள நாங்கள் இரவு பகலாக உபவாசித்து, ஜெபித்து, ஆராதிப்பதில் நேரம் செலவிடுகிறோமா?

சிமியோன், அன்னாளாகியோருக்குள் இருக்கும் நற்குணங்களை உடைய பிள்ளைகளாய் நாம் ஒவ்வொருவரும் இருப்போமாக. கர்த்தர் ஆவிக்குரிய வெளிப்பாடுகளைத் தந்து நம்மையும் தாழ்மையாக வழிநடத்துவாராக. ஆமென். 

இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர். ஏசாயா 28:29

நன்றி கர்த்தாவே

த.பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved