ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

மனந்திரும்புவதால் மகிழ்ச்சியடையும் பரமபிதா.


திருமணமான புதுத் தம்பதிமாருக்கு குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போது

என்னவெல்லாம் செய்வார்கள்? முதலில் பிறக்கப் போகும் பிள்ளை ஆணா? பெண்ணா? என்று அறிந்து கொள்ளவே ஆசைப்படுவார்கள் அவசரப்படுவார்கள். காரணம் என்ன பிள்ளையென்று அறிந்தால் தான் அப்பிள்ளைக்கு பெயர் வைக்க, ஆடைகள் வாங்க சுலபமாய் இருக்கும் என்பதனாலாகும். அத்தோடு பிள்ளை பிறக்க முதலே தொட்டில், விளையாட்டுப் பொருட்கள், மருந்துகள் என முன்னேற்பாடாக அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்து ஆவலாக காத்திருப்பார்கள். 

பூமிக்குரிய பெற்றோரே இவ்வாறு ஆரவாரப்படும் பொழுது, நம்மை உண்டாக்கிய பரம தகப்பன் ஆதியில் மனிதனை உண்டாக்கும் பொழுது என்னவெல்லாம் செய்திருப்பார்!!!!!!

தேவன் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் முதலில் உண்டாக்கிய பின்னரே மனிதனை உண்டாக்கினார். வானத்தை, பூமியை, வெளிச்சத்தை, சமுத்திரத்தை, புல்லை, பூண்டை, கனிதரும் விருட்சங்களை, சூரியனை, சந்திரனை, நட்சத்திரங்களை, நீரில் வாழும் ஜீவஜந்துக்களை, பறவைகளை, மிருகங்களை என இன்று நாங்கள் வாழும் பூமியில் காணும் அனைத்தையும் உண்டாக்கினார். இவற்றை உண்டாக்கிய போது ஐந்து தடவைகள் நல்லது நல்லது எனச் சென்னார்.

ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது.

அவர் உண்டாக்கிய எதுவும் அவருக்கு தேவையில்லை. தன்னுடைய நலனுக்காக அதை அவர் உண்டாக்கவில்லை. தன்னுடைய பிள்ளைகளாகிய எங்களுக்காகவே அனைத்தையும் உண்டாக்கினார். ஆக அவர் நல்லது என்று சொல்லும் பொழுது; என் பிள்ளைகள் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, இன்பமாக இருக்க இவை போதுமானதயிருக்கும் என்ற அர்த்தத்தில் சொல்லியிருப்பார் என கருத வேண்டியுள்ளது. அடுத்ததாக, நல்லது என்று சொல்லும் பொழுது அது ஒரு அறிவாய்ந்த ஆய்வின் பின் வரும் முடிவாகும். தனது தயாரிப்பை அல்லது செயலை ஆய்வு செய்து அதிலிருந்து வந்த முடிவே நால்லதென்பதாகும். பகுத்தறிவு என்பது படைப்பாளராகிய யெகோவாவிடமிருந்து வந்ததே. அவர் உண்டாக்கிய மனிதன் கடவுள் இல்லை என மறுப்பதே விந்தை.

ஆதிப்பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் தேவனின் கட்டளைக்கு கீழ்படியாமையால் பாவம் செய்தார்கள். இதன் விளைவாக சர்ப்பம், ஆதாம், ஏவாள் ஆகிய மூவருக்கும் தண்டனை கிடைத்தது, பூமியானதும் சபிக்கப்பட்டது.

மகிழ்ச்சியாக வாழ வேண்டிய பூமியில் வேதனை துயரத்தோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் உண்டாயிற்று. ஆனாலும் அன்பாகவே இருக்கும் கர்த்தர். மீண்டும் ஒரு முறை அளுத்தி சொல்லுங்கள் தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்புள்ளவராக அல்ல அன்பே அவரின் வடிவம். எந்த பிரச்சனையையும் அன்பின் ஊடாகவே அணுகுவார். 

எப்பொழுதும் பிறரைக் (நம்மை) குறித்த சிந்தனையே அன்பாகவே இருக்கும் தேவனுக்கிருக்கும். 

பாவம் செய்து தேவனைவிட்டு விலகிப் போன தனது பிள்ளைகளை மீட்கவே குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து பூமிக்கு வந்து பரிசுத்த இரத்தத்தை சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார். நமக்கான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டதால், இப்பொழுது நாங்கள் தண்டனை அனுபவிக்க தேவையில்லை. இயேசுக்கிறிஸ்துவையே மெய்யான தேவன் என விசுவாசித்து மனந்திரும்பி பாவமன்னிப்பை பெற்று ஞானஸ்தானம் பெறுவதன் மூலம் அவர் பிள்ளையாக மாறி தண்டனைக்கு தப்பிவிடுகிறோம்.

மீண்டும் தனது பிள்ளையாக மாற வேண்டும் என்ற ஆசையில் வாஞ்சையில் காத்திருக்கும் தேவன், ஒருமனிதன் மனந்திரும்பும் போது அவனைக்குறித்து அளவற்ற மகிழ்ச்சியடைகிறார். கர்த்தருக்கு பணமோ பொருளோ வேறு கிரியைகளோ தேவையில்லை. அவருக்கு தேவயானது ஒன்றே எங்கள் ஒவ்வொருவரின் பருசுத்தமான இருதயமேயாகும்.

மனந்திரும்புதல் என்றால்: மெய் தேவனாகிய இயேசுக்கிறிதுவையே சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு. பாவ, பழைய வாழ்க்கையை முற்றுமுழுதாக விட்டுவிடுதலே மனந்திரும்புதலாகும். யோவான் ஸ்நானகனதும், இயேசுக்கிறிஸ்துவினதும் முதல் செய்தி மனந்திரும்புதலாகவே இருந்தது.

வேதத்திலிருந்து பாவத்தில் வாழ்ந்த ஒருவர் மனந்திரும்பி சொந்த தகப்பனிடம் வந்த ஒரு சம்பவத்தை இன்று தியானிக்கலாம்.

எல்லோருக்கும் தெரிந்த இளையகுமாரன் கதையையே அதுவாகும்.

லுக்கா 15:10-24 வரையுள்ள வசனங்களில் இக்கதையை வாசிக்கலாம்.

ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரன்கள் இருந்தார்கள். அதில் இளைய குமாரன் தகப்பனிடம் சென்று தனக்குரிய குடும்ப சொத்தின் பங்கை பிரித்து தரும்படி கேட்கிறான். தகப்பன் சொத்தை பிரித்துக் கொடுத்தார்.

சில நாட்களுக்கு பின் இளைய குமாரன் தூர தேசத்துக்கு போய் பிழையான வழியில் அவனிடமிருந்த பணமனைத்தையும் அழித்துப்போட்டான். 

அவன் கையில் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அவன் வாழ்ந்த தேசத்தில் பஞ்சமும் உண்டாயிற்று. அவன் அத்தேசத்திலிருந்த ஒருவனோடு ஒட்டிக்கொண்டான். அன்நபர் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினார். இளைய குமாரனுக்கு போதிய சாப்பாடீன்மையால், பன்றிகளுக்கு வைக்கும் தவிட்டையாவது சாப்பிட்டு பசியாறலாம் என்றால் அதையும் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

இப்படியான கஷ்ரங்களை அனுபவித்த பிற்பாடே தனது தவறுகளை உணர்ந்து, புத்தி தெளிந்து தனது தகப்பன் வீடு போகத்தீர்மானிக்கிறான். தனது தகப்பன் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு போதியளவு உணவிருக்கும் பொழுது, தான் இங்கு வேலை செய்தும் உணவு கிடைக்கவில்லை என கவலைப்படுகிறான். தன்னுடைய தகப்பனிடம் சென்று தனது தவறுகள் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, அவர் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காறரைப் போல் தன்னையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம் என நினைத்து தகப்பன் வீட்டை நோக்கிப் பயணித்தான்.

வீட்டுக்கு வரும் மகனை தூரத்திலேயே கண்ட தகப்பன், மனதுருகி வீட்டைவிட்டு ஓடிச் சென்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தம்செய்தார்.

தகப்பனார் வேலைக்காரரைப் பார்த்து விலையுயர்ந்த வஸ்திரத்தை கொண்டுவாருங்கள், அதை உடுத்தி கைக்கு மோதிரத்தையும் காலுக்கு பாதரட்சையையும் போடுங்கள் என உத்தரவிட்டார்.

கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து சந்தோஷமாயிருப்போம் என்று எழுதியுள்ளதை வேதத்தில் வாசிக்கலாம்.

இளைய குமாரனின் நிலை.

இளைய குமாரன் தகப்பனிடம் சென்று மற்றைய நண்பர்களைப் போல் தான் வெளியூருக்கு சென்று வியாபாரம் பண்ணப்போகிறதாகவும், தனக்கு வரவேண்டிய சொத்தின் பங்கை பிரித்து தரும்படி கேட்டிருப்பான். இங்கே வயலில் எல்லாம் தன்னால் வேலை செய்ய முடியாது. வித்தியாசமாய் சிந்தித்து இந்த காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை வாழ வேண்டும் என சொல்லி தகப்பனிடம் செத்தைக் கேட்டிருப்பார். சொத்தையெல்லாம் பணமாக மாற்றிய பின் வெளியூருக்கு சென்று தப்பான நண்பர்களுடன் கூடி தவறான வழியில் பணத்தை செலவு செய்து அனைத்தையும் இழந்து போனார். இப்பொழுது உதவிக்கு யாருமில்லை. பணம் இருந்த பொழுது கூட இருந்த நண்பர்கள் இப்பொழுது கண்டும் காணாதது போல போனார்கள்.  வாழுவதற்கு வேறு வழியில்லாமல் அவ்வூரைச் சேர்ந்த ஒருவரோடு ஒட்டிக்கொண்டார். ஒட்டிக் கொண்டது என்பதின் பொருள் தானாக சென்று இணைந்து கொள்வதாகும். அந்நபரும் இளைய குமாரனின் தொல்லை தாங்காமல் பன்றிகள் வளர்க்கும் தனது வயலுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார். அங்கேயிருந்தவர்கள் இளைய குமாரனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. போதியளவு சாப்பாடு கொடுப்பதேயில்லை. பன்றிகளைக் கவனித்தளவுக்கு கூட இளைய குமாரன் கவனிக்கப்படவில்லை. அவமதிப்பின் மத்தியில், பசிக்கொடுமை தாங்க முடியாமல் பன்றிக்கு வைக்கும் தவிட்டையாவது உண்ணலாம் என்றால், அதைக்கூட அங்குள்ளவர்கள் கொடுப்பதில்லை.

இப்படியான பரிதாபமான நிலையிலேயே தனது தகப்பனின் பெருந்தன்மையை நினைக்கிறான். வயலில் வேலை செய்பவர்களை தனது தந்தை எவ்வளவு கௌரவமாக நடத்தி உணவு கொடுக்கிறார் என்பதை நினைவுபடுத்தி பார்க்கிறான். புத்தி தெளிந்தது என்பதன் பொருள் அனுபவப்பட்டு பட்டறிவை பெற்றுக்கொண்டான் என்பதாகும். 

மீண்டும் அப்பாவிடம் போய் மன்னிப்பு கேட்டு, பிள்ளை என்ற அந்தஸ்து இல்லாமல் ஒரு வேலைக்காறனாய் வாழ அனுமதி தரும்படி கெஞ்சிக் கேட்கலாம் என தீர்மானித்து, வீடு நோக்கிப் புறப்பட்டான்.

தகப்பனின் நிலை.

இளைய மகன் திரும்பி வீடு வருவான் என்ற ஏக்கத்தோடு, வழமை போல் இன்றும் வாசலை பார்ப்பதும், பின் வீதியை எட்டிப் பார்பதுமாக இருக்கும் தந்தைக்கு ஆச்சரியம், அதோ என்மகன் தான் அவன் என் இளையமகன் தான் என்று சொல்லிக்கொண்டு வீதியில் இறங்கி அவனை நோக்கி ஓடுகிறார். அழுக்கு சட்டை நலிந்த உருவம் தாடி தலைமுடியெல்லாம் பரட்டையாகிவிட்டது காலில் செருப்பற்று உருக்குலைந்து போன தனது இளைய மகனை கண்ணீர்மல்க கட்டியணைத்து முத்தம் செய்தார். 

மகன் ஏதோ சொல்ல முனைந்த பொழுது, அவனை பேச விடாது அவற்றை கேட்காது, வேலைக்காறரை நோக்கி கட்டளைகள் பறந்தன. புது வஸ்திரத்தை கொண்டுவா, மோதிரத்தை கொண்டுவா, பாதரட்சையை கொண்டுவா, கொழுத்த கன்றை அடியுங்கள் விருந்துக்கு தாயாராகுங்கள் எனச் சொல்லி மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார் தகப்பனார். 

பிரியமானவர்களே!

மேலே தியானித்த கதை வேறு யாருடையதுமல்ல என்னுடையதும் உங்களுடையதுமான கதையேதான். (தற்பரிசோதனை பண்ணிப் பாருங்கள்)

இளைய குமாரன் பாசமுள்ள தகப்பனை விட்டு உலகத்தின் பின்னால் மாம்ச இச்சைகளின் பின்னால் சென்றான். முடிவில் வெறுமையானான். 

உணவு கொடுக்கவோ, கரிசனைப்படவோ, உதவவோ யாருமில்லாது அநாதையானான். 

தன்னுடையை தவறான முடிவால் வந்த விளைவுகளை உணர்ந்து இதுவரை பயணித்த பாதை தவறென்பதை அறிந்து மனந்திரும்பினான். 

தகப்பன் மட்டுமே தனக்கு எப்பொழுதும் அன்பாய், ஆதரவாய், ஆறுதலாய், பாதுகாப்பாயிருப்பார் என நம்பி தகப்பன் வீட்டை நோக்கி பயணித்தான். 

இந்தப்பயணம் தகப்பன் வீட்டை நோக்கியது. உலகத்தை நோக்கியதோ மாம்ச இச்சைகளை நோக்கியதோ அல்ல. சத்துருவின் பிடியிலிருந்து விடுபட்டு பரம தகப்பனாகிய இயேசுக்கிறிஸ்துவை நோக்கிய பயணமாகும்.

மகனைக் கண்ட தகப்பனுக்கோ அளவற்ற மகிழ்ச்சி. இளைய குமாரனின் பழைய வாழ்க்கையைப்பற்றி சிந்திக்கவில்லை. கொண்டு சென்ற பணத்தையெல்லாம் விரயமாக்கி அழித்துவிட்டியோ எனக் கேள்வி கேட்கவோ, திட்டவோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவற்றையேல்லம் அவர் நினைக்கவே இல்லை, இல்லை.

மகன் திரும்ப வந்து விட்டதே போதும். என்வாரிசு என்சொத்து என்சுதந்தரவாளி திரும்ப எனக்கு கிடைத்துவிட்டான் அதுவே போதும் என்று சொல்லி அழுது கட்டிப்பிடித்து முத்தமிட்டு விருந்துக்கு ஆயத்தப்படும்படி வேலைகாரரிடம் சொல்லி அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

இந்த தகப்பனின் அன்பு இன்றும் சற்றேனும் குறையவில்லை சற்றேனும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை. இன்றும் வாசலில் நின்று தவிப்போடு ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பிள்ளை மனந்திரும்பி வரமாட்டானா என. சத்துருவின் பிடியில் இருக்கும் மக்கள் மனந்திரும்பி இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம், நற்செய்தி அறிவித்து ஆத்தும ஆதாயம் செய்வோம். அவரின் அன்பின் செட்டைகளுக்குள் அடைக்கலமாகி, அவரின் பிள்ளைகள் என்ற அந்தஸ்தோடு, மகிழ்ச்சியான வாழ்வை அனைவரும் சுதந்தரித்துக் கொள்வோமாக. ஆமென்.

நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். லூக்கா 5:32

நன்றி கர்த்தாவே

த. பிரபா.

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved