ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

நினிவே மக்களின் மனந்திரும்புதலுக்காக பரிதபித்த கர்த்தர்.


கிறிஸ்தவ மதம் மேற்குலக மதம், வெள்ளைக்காரனின் மதம், யூதரின் மதம் எனக் கருதுவோர் அநேகருண்டு. இப்படி தவறாக கருதுவதாலேயே இயேசுக்கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.
முதலாவதாக கிறிஸ்தவம் ஒரு மதமல்ல, அது தகப்பன் பிள்ளை உறவாகும்.
மதமென்பது ஒரு, அல்லது பல கடவுளை நம்பி வழிபடும் அமைப்பாகும்.
மதமென்பது “வெறி” என்றும் ஒரு பொருளுண்டு. மதம் பிறரை ஆளும் அடிமைப்படுத்தும், கடமைகளைத் திணிக்கும்.
கிறிஸ்தவத்திற்கு ஒரு வரலாறுண்டு. அந்த வரலாற்றை வேதப்புத்தகத்தில் கற்கலாம். அந்த வேதப்புத்தகத்தில் தகப்பன் பிள்ளையாக வாழ்ந்த நிஜ வரலாறே எழுதப்பட்டுள்ளது. தன்னுடைய பிள்ளைகளோடு உறவாட பாவம் தடையாக இருந்த பொழுது, அப்பாவத்திற்குரிய தண்டனையை ஏற்க இயேசுக்கிறிஸ்து தானாகவே முன்வந்தார். தன் பிள்ளைகளை மீட்டுக் கொள்வதற்காக இயேசுக்கிறிஸ்து இப்பூமிக்கு வந்து பாடுகள் அனுபவித்து தன்னுயிரைக்கொடுத்து இரத்தம்சிந்தி தன் பிள்ளைகளை மீட்டுக்கொண்டவராவார். இதைவிட மேலான அன்புள்ள தியகமுள்ள கரிசனையுள்ள தகப்பனை (கடவுளைக்) கண்டதுண்டோ கேட்டதுண்டோ?

இரண்டாவதாக கிறிஸ்தவம் மேற்குலகுக்கோ, வெள்ளைக்காரருக்கோ, யூதருக்கோ சொந்தமானதல்ல. கிறிஸ்தவம் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் சொந்தமானது. மனிதனை படைக்கும் பொழுது தேவசாயலில் படைத்தார். அந்த உருவ அமைப்பை கொண்ட மனிதர்கள் அவரை புறக்கணிப்பதுதான் வேதனை. இயேசுக்கிறிஸ்து ஒரு நபருக்கோ, அல்லது ஒரு குழுவுக்கோ, அல்லது ஒரு இனத்துக்காகவோ இரத்தம் சிந்தவில்லை.
முழு மனுக் குலத்துக்காகவும் இரத்தம் சிந்தி பாவமன்னிப்பை பெற்றுக் கொடுத்ததோடு அவர் பிள்ளையாக மனந்திரும்பி வாழ வழிவகுத்துள்ளார்.
இயற்கையை, ராஜாக்களை, வீரர்களை, ஞானிகளைக் கடவுளாக கொண்ட சமூகத்தினரும். ஒரு குழுவுக்கு, ஒரு சாதிக்கு, ஒரு இனத்துக்கு, ஒரு நாட்டுக்கு, ஒரு பிராந்தியத்துக்கொரு கடவுளென பின்பற்றிய மக்கள் கூட்டத்தினரே, கிறிஸ்தவம் ஒரு சாராருக்கு சொந்தமானதென கருதுகிறார்கள். உண்மையை தெரிந்து கொள்ளாது, புதுவரையறையைக் கொடுக்கிறார்கள். திறந்தமனதோடு ஒரு மனிதன் பரிசுத்த வேதாகமத்தை கற்பதன் மூலம் உண்மையை அறிவதோடு, தானும் அவ்வேதத்துக்கு சொந்தக்காறன் (வேதக்காறன்) என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

கிறிஸ்தவ வரலாறு யூதருக்கூடாகவே வருவதால் யூதமதம் என்று நினைத்துவிடக்கூடாது. கர்த்தர் கீழ்ப்படிவுள்ள ஒரு மனிதனை தெரிவு செய்கிறார். அவர் தான் ஆபிரகாம். ஊர் (இன்றைய ஈராக்) எனும் தேசத்தில் வாழ்ந்த ஆபிரகாமை, அவர் தேசத்தை, இனத்தை, தகப்பன் வீட்டை விட்டுவிட்டு தான் காட்டும் தேசத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். கர்த்தரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து சென்று வாழ்ந்த இடம் தான் இன்றைய இஸ்ரவேலாகும். அன்றைக்கு கானான் என அழைக்கப்பட்டது. தேவனை விசுவாசித்து கீழ்படிந்து வாழ்ந்த ஆபிரகாமை தேவன் ஆசீர்வதித்தார். அவர் சந்ததி வானத்து நட்சத்திரத்தைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் எனச் சொன்னார். ஆபிரகாமின் பிள்ளை ஈசாக்கு, ஈசாக்கின் பிள்ளை ஏசா யாக்கோபு ஆகும். யாக்கோபின் பிள்ளைகள் பன்னிரெண்டு போர். அவர்களின் ஒருவர் தான் யூதாவாகும். இஸ்ரவேல் தேசத்தை இந்த பன்னிரெண்டு பிள்ளைகளும் பங்கிட்டுக் கொள்ளுகிறார்கள். அதில் யூதா கோத்திரத்தார் எருசலேமை மையப்படுத்திய நிலத்தில் வசித்தார்கள். இவர்களே பின்னாளில் யூதர்கள் என அழைக்கப்பட்டார்கள்.
இந்த வரலாற்றிலிருந்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து கொள்ளலாம்.
கர்த்தர் யூத இனத்தை தெரிந்து கொள்ளவில்லை. அவர் தெரிந்து கொண்டது ஒரு மனிதனாகிய ஆபிரகாமையே.
அவரே பின்னாளில் பெரிய ஜாதியாகி ஒரு இனமானார். இப்படிப்பட்ட வழிமுறைக்கூடாக பயணித்து வந்தே கர்த்தர் ஒட்டுமொத்த உலகத்தினரையும் நேசித்தார். இன்றைக்கு நாங்கள் ஆவிக்குரிய ஆபிரகாமின் சந்ததியினராவோம். இனத்தில் நிறத்தில் பூகோள அமைப்பில் ஒரு விஷேசமுமில்லை. நீங்கள் யாரை தேவனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.

கர்த்தரிடம் பட்சபாதமில்லை எல்லோரையும் தனது பிள்ளையாகவே நினைக்கிறார். அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத்தேயு 5:45). ஒருத்தரையும் புறக்காணியாது நேசிக்கும் தந்தையை சொந்த தகப்பனாக ஏற்று அவருக்கு பிரியமாய் வாழும்பட்சத்தில், அவருடைய புத்திரராகி அனைத்திற்கும் உருத்துடையவர்களாகி விடுவோம். அவரை சொந்த இரட்சகராக ஏற்காத பட்சத்தில் அந்த பாக்கியத்தை இழந்து நித்திய ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாகி விடுவோம்.
கர்த்தர் எல்லோரையும் நேசிக்கிறார் என்பதற்கு வேதத்தில் அநேக உண்மைச் சம்பவங்கள் சரித்திர ஆதாரங்கள் உண்டு.
அவ்வாறு நடந்த ஒரு சம்பவத்தையே இன்றைக்கு தியானிக்கலாம்.

நினிவே.
நோவாவின் மூன்று பிள்ளைகளில் ஒருவரான சேமுக்கு ஐந்து ஆண்பிள்ளைகள். இந்த ஐந்து ஆண் பிள்ளைகளின் ஒருவர் பெயர் அசூர் ஆகும். இதை ஆதியாகமம் 10.22ல் வாசிக்கலாம். அசூர் நினிவேயைக் கட்டினான் என்பதை ஆதியாகமம் 10.11ல் வாசிக்கலாம். அசூரின் வம்சத்தினரே அசீரியர் ஆவார்கள். பின்னாளில் நோவாவின் இன்னொரு மகனாகிய காமின் வழி வந்த நிம்ரோத்தின் பிள்ளைகளை இவர்கள் திருமணம் செய்திருக்க வாய்ப்புண்டு. தொல்பொருள் ஆய்வுகள் மூலம் நினிவே பட்டணம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இன்றைய வட ஈராக்கின் மோசூல் புற நகரின் இருப்பிடமே அன்றைய நினிவே ஆகும். டைக்ரிஸ் ஆற்றின் கிழக்கு கரையை அண்டிய பகுதியை சேர்ந்த நினிவே, செழிப்புமிக்க அழகு கொண்ட நகரமாகும். இந்நகரம் வணிக மையமாக ஒருகாலத்தில் இருந்தது. 1800 ஏக்கர் (7 கி.மீ) நிலப்பரப்பை கொண்ட நினிவே பெரு நகரம், நீண்ட உயர்ந்த தடுப்பு சுவர்களை கொண்டது. கோட்டை, அரண்மனை, கோவில், குடிமனைகள் கொண்ட வளமான நகரமாகும். மனிதர்களை மரத்தில் கட்டி உயிரோடு தோலை உரிப்பவர்களாயிருந்தார்கள். உயிரோடு நாக்கைப் பிடுங்குவது, தலையை வெட்டியெறிந்துவிட்டு பிணங்களை பிரமிட் மாதிரி அடுக்கிவைத்து வேடிக்கை பார்க்கும் குரூர மனம்படைத்தவர்கள் அசீரியர்கள்.
அசீரியர்கள் பல நாடுகளோடு யுத்தம் செய்து கொடூரமான கொலைகளை நிகழ்த்திய கொடூரமானவர்கள். இதனால் அசீரியர்களை கண்டு அன்னிய ராஜாக்களும் மக்களும் அஞ்சினார்கள்.
இப்படிப்பட்ட நினிவே நகரத்துக்கு யோனாவை போய் பிரசங்கிக்கும்படி கர்த்தர் கேட்டுக் கொண்டார்.

யோனா
யோனா 550 மைல் தூரமுள்ள நினிவேக்கு போகாமல், 2500 மைல் தூரமுள்ள தர்ஷீசுக்கு (ஸ்பெயின்) போவதற்காக கப்பல் ஏறினார். கப்பல் பயணத்தின் போது கப்பல் உடையும் அளவுக்கு கடல் கொந்தளிப்பு உண்டாயிற்று. இதற்கு யார் காரணமென சீட்டுப் போட்ட பொழுது யோனாவின் பெயருக்கு சீட்டு விழுந்தது. கப்பல் தலைவன் யோனாவிடம் வந்து விசாரணை பண்ணினான்.
அதற்கு யோனா: தான் எபிரெயன் எனவும் சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடத்தில் பயபக்தியுள்ளவன் எனச் சொன்னதோடு. கர்த்தரின் சமுகத்தைவிட்டு விலகி ஓடிப்போவதாகச் சொன்னார். தன்னை தூக்கி சமுத்திரத்தில் போட்டுவிட்டால் சமுத்திரம் அமைதியாகிவிடுமென ஆலோசனையும் யோனா சொன்னார்.
அவர்களும் யோனாவைத் தூக்கி கடலில் போட்டார்கள் சமுத்திரம் அமைதியானது.
யோனாவை பெரிய மீன் விழுங்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார், மீன் யோனாவை விழுங்கிற்று. மூன்று நாள் யோனா மீனின் வயிற்றில் இருந்தார்.
யோனா ஜெபித்தார், கர்த்தர் மீனுக்கு கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.
மீண்டும் யோனாவை நினிவேக்கு சென்று அவர்களுக்கு விரோதமாய் பிரசங்கிக்கும்படி சொன்னார். மூன்று நாள் பிரயாண தூரமுள்ள பெரிய நகரமாய் நினிவே இருந்தது. யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒரு நாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே அழிக்கப்பட்டுப் போகும் என எச்சரித்தார்.
நினிவே மக்களும் ராஜாவும் மிருக ஜீவன்களும் தேவனை விசுவாசித்து உபவாசமிருந்து உரத்த சத்தமாய் ஜெபித்தார்கள். அவர்கள் தமது பொல்லாத வழிகளை விட்டு மனந்திரும்பினார்கள்.
தேவன் அவர்களின் மனந்திரும்புதலையும், கிரியைகளையும் பார்த்து அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

யோனா உண்மையுள்ள ஒரு பக்திமான். கப்பல் தலைவன் கேள்விகளுக்கெல்லாம் உண்மையாக பதில் அளித்தார். தனது கீழ்ப்படியாமையே கடல் கொந்தளிப்புக்கு காரணம் என துணிகரமாய் பதில் சொன்னதோடு, தன்னை தூக்கி கடலில் போட்டுவிட்டால் நிலமை சீராகிவிடுமென தீர்வும் சொன்னார். தன்னால் பிறர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மனவருத்தம் இருந்ததோடு மரிப்பதற்கும் யோனா தயங்கவில்லை. அவர் கப்பல் தலைவனுக்கு பதில் கொடுக்கும் பொழுது தன்னுடைய தேவன் சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கியவர் எனச் சொன்னர். சமுத்திரம் முதலில் வருவதை பார்க்கும்பொழுது யோனா மரித்தாலும் தேவன் காப்பாற்றுவார் என்ற விசுவாசத்தில் பேசியிருப்பார் என எண்ணத்தோன்றுகிறது.
கப்பல் பயணத்தின் போது ஆபத்தை சந்தித்த வேளை அவர்கள் யார் நிமித்தம் வந்ததென்பதை ஆராய்ந்தார்கள். விசுவாசிகளான நாமும் வாழ்க்கையில் நெருக்கடிகளைச் சந்திக்கும் போது, எங்களை நாங்களே ஆராய்ந்து கர்த்தரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

1) யோனா ஏன் நினிவேக்கு போக மறுத்தார்?
இதற்கான பதிலை யோனா 4:2ல் வாசிக்கலாம். ஆரம்பத்தில் கர்த்தருக்கும் யோனாவுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது. அப்பொழுது யோனா ஆரம்பத்திலேயே சொன்னேனல்லவா. நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன் என்றார். இதன் சுருக்கம் எச்சரிக்கும் தேவன் அவர்களை மன்னித்து நேசிப்பார் என்பதாகும்.
ஆகவே கொடுரமான அசீரியர் தங்களுக்கு ஆபத்தாயிருப்பவர்கள் அழிந்து போவது நல்லதென யோனா நினைத்தார்.
ஒருவேளை தான் எச்சரித்து அது நடக்காமல் போனால் தன்னுயிருக்கு அசீரியர்களால் ஆபத்து வரக்கூடும் எனவும் நினைத்திருக்கலாம்.

2) யோனாவின் எச்சரிப்பை நினிவே மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?
(இந்தக்கட்டுரைக்காக பல கட்டுரைகளை வாசித்து பல செய்திகளை கேட்டு ஆரய்ந்த பொழுது. நான் கேட்ட ஒரு செய்தியில் போதகர் ஒருவர் சென்ன பதில் எனக்கு சரியாகப்பட்டது அதை நான் இதில் பதிவிடுகிறேன்.)
நினிவே மக்கள் பல தெய்வ வணக்கமுள்ள விக்கிரக ஆராதைக்காறர்.
(எது தெய்வம் என்று தெரியாமையே பல தெய்வ வணக்கத்துக்கு காரணம்.)
அவர்கள் “நினிவா” எனும் மீன் தலையைக் கொண்ட மனித உருவில் இருக்கும் விக்கிரகத்தை வணங்குபவர்கள்.
அடுத்து “டாசன்” எனும் சமுத்திர தேவதையையும் வணங்கி வந்தார்கள்.
இப்பொழுது யோனா மீனின் வயிற்றில் மூன்று நாள் இருந்து உருவமாற்றத்தோடு நினிவே வந்து பிரசங்கிக்கும் பொழுது, அவரின் பிண்ணனியை கேட்டுத் தெரிந்து கொண்டு அதை அப்படியே விசுவாசித்து விட்டார்கள்.
சாதாரண இருட்டறையில் மூன்றுநாள் இருந்தாலே வித்தியாசம் தெரியும். யோனாவோ மூன்று நாள் மீனின் வயிற்றில் இருந்திருக்கிறார். அவரின் நிறம் உடை வாசனை போன்றன வித்தியாசமாய் இருந்திருக்கும். அத்தோடு நினிவே மக்களின் தெய்வமாகிய மீனின் வயிற்றிலும், சமுத்திரத்திலும் இருந்தபடியால், அதுவும் மூன்று நாளுக்கு பின் உயிரோடு வந்தபடியால், நிச்சயம் யோனா கடவுளால் அனுப்பப்பட்ட மனுஷன் தான் என்று கருதி அவர் எச்சரிப்பை அசட்டை பண்ணவில்லை.

கர்த்தர் நினிவே மக்களுக்காக மனதுருகியதை எரிச்சலோடு பார்த்த யோனாவுக்கு ஆமணக்கு செடி மூலம் பாடம் புகட்டினார் கர்த்தர். தனக்கு நிழலாயிருந்த ஆமணக்கு செடி காய்ந்து போனதற்காக மனம்வருந்திய யோனாவைப் பார்த்து கர்த்தர் சொன்னார்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காக பரிதபிக்கிறாயே.
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகாநகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
யோனா 4:10-11.

பிரியமானவர்களே!
கி.மு 800 காலப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவமே இதுவாகும்.
2800 ஆண்டுகள் கடந்தும் தேவன் அதே பரிதபிப்போடே இன்றும் இருக்கிறார்.
அவர் எல்லோரையும் நேசிக்கிறார். பாவியை துரோகியை எதிரியை கள்ளனை கொலைகாரனை துன்மார்க்கனையென பட்டியல் நீண்டு கொண்டே போகும். பாகுபாடின்றி எல்லோரையும் நேசித்த போதும், ஜனங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்பி கர்த்தரே மெய்யான தேவன் என விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவர்களை தனது பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுகிறார்.
அவர் ஒரு நாட்டுக்கோ, ஒரு இனத்துக்கோ, ஒரு குழுவுக்கான தேவன் அல்ல, ஒட்டுமொத்த உலக மக்களுக்கான தேவன்.
நினிவே மக்களின் அக்கிரமத்துக்கு தண்டனையாக சோதோம் பட்டணத்தை அக்கினியால் அழித்தது போல் அழித்திருக்கலாம்.
தண்டனை கொடுக்க முதல் எச்சரிப்பை கொடுக்கிறார். நினிவே பட்டணத்தார் மனந்திரும்பியபடியால் அழிவிலிருந்து தப்பிக் கொண்டார்கள்.

தேவப்பிள்ளைகளே!
அழிவில் இருக்கும் மக்கள் மீட்கப்பட பிரையாசப்படுவோம்.
நாம் ஒரு போதும் யோனா போல் கர்த்தர் சொன்னதை செய்யாதிருக்கக் கூடாது.
தேவ கட்டளைக்கு கீழ்படிந்து யோனாவை விழுங்கி துப்பிய மீனைப்போல் வாழுவோம். தேவன் தரும் பணி எதுவாய் இருந்தாலும் மனப்பூர்வமாய் ஏற்று நிறைவேற்றுவோமாக. உலக மக்கள் எல்லோரையும் உண்டாக்கிய தேவன் நேசிக்கிறார் என்பதை அறிவித்து, அவர்கள் அழிவிலிருந்து மீட்க்கப்பட்டு, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள, ஆத்தும ஆதாயம் செய்வோமாக. ஆமென்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8

நன்றி கர்த்தாவே.

த. பிரபா.

 

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved