ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

ஒன்றுமில்லை.


இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். யோவான் 21:5

பேதுரு தலைமையில், கூடவே ஆறு சீஷர்களும் மீன்பிடிக்கச் சென்றார்கள். மீன்பிடிப்பதொன்றும் அவர்களுக்கு புதிய அனுபவமல்ல, கடலும் புதிதானதல்ல. கலிலோயா கடற்கரையை அண்டியே பிறந்து வளர்ந்தவர்கள். கடல்தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு படகைச் செலுத்தி, வலையை வீசி மீன்பிடிப்பதெல்லாம் சர்வ சாதாரணமாகும். கடலலை நீரோட்டங்களை அவதானித்து கடலில் ஏற்படப்போகும் மாற்றங்களை முன்கூட்டியே அறியக்கூடிய வல்லமை கொண்டவர்கள்.
53கி.மீ பரப்பளவைக் கொண்ட கலிலேயாக் கடல், 21கி.மீ நீளமும் 13கி.மீ அகலத்தையுடையது.

இந்த மீன்பிடிப்பே அவர்களின் கடைசி மீன்பிடிப்பென்பதை அறியாதிருந்தார்கள்.
இயேசுக்கிறிஸ்துவோடு கூட இருந்த பின்னர், மூன்றண்டுகள் கடந்துவிட்ட நிலையிலே, அவர் கூட இல்லாதபோது, சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் கடல் தொழிலுக்கு சென்றிருந்தார்கள்.
இயேசுக்கிறிஸ்துவோடு கூட இருந்த நாட்களில், அவர் சீஷர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தார். இப்போது இயேசுக்கிறிஸ்து கூட இல்லை. இயேசுக்கிறிஸ்து கூட இருந்த போதும் நிதிப் பொறுப்பாளராய் யூதாஸ் இருந்தார், அவரிடமே பணமிருக்கும். இப்போது யூதாசும் இல்லை, சீஷர்கள் கையில் பணமுமில்லை.
பேதுருவுக்கு குடும்பம் வேறு உண்டு.
ஆகவே பேதுரு பழையபடி தொழிலுக்கு போனால் தான் வயிற்றுப் பிழைப்பை பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.

இயேசுக்கிறிஸ்துவோடு இருந்த நாட்களில், அவரின் அற்புதங்கள், உதவிகள் மூலம் ஏற்பட்ட தொடர்புகளை வைத்து, அவர்கள் வீடுகளுக்கு சென்று சீஷர்கள் உதவி கேட்கவில்லை, காணிக்கை பெறவுமில்லை.
யாதொருவரிடமும் கையேந்தாமலும், கடமைப்படாமலும் உழைத்து வாழவேண்டுமென்ற தீர்மானம் நல்லதே, ஆனால் இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசம் வைக்காமல், அவர் கொடுத்த பணியை செய்யாது, கீழ்படியாது போனதே சரியானதல்ல. இதைப் பின்மாற்றமென்று கூடச் சொல்லலாம்.

கடலுக்கு சென்று இராமுழுதும் பிரயாசப்பட்டு ஒன்றும் அகப்படவில்லை. காலியான படகோடு அதிகாலை வீடு திரும்பிப் போகலாமென்று கரையொதுங்கும் வேளையிலும், மீண்டுமொருதடவை முயற்சிக்கலாம். சாப்பாட்டுக்காவது கொஞ்ச மீன் அகப்படாதா? என்ற அங்கலாய்ப்போடு நின்ற பொழுதே.
கரையிலிருந்து ஒரு குரல் கேட்டது. புசிக்கிறதுக்கு எதாவது உண்டா? என்று அந்த மனிதர் கேட்டார்.
அதற்கு அவர்கள் ஒன்றுமில்லையென்றார்கள்.

ஏழுபேர் போய் இரவிரவாய் பிரயாசப்பட்டு ஒன்றுமில்லை என்று சொல்ல வெட்காயிருக்குமல்லவா! ஆகவே இன்னும் வலையிழுக்கவில்லை, இருக்கிற மீன் எங்களுக்கு தான் போதுமென்று பொய் சொல்லியிருக்கலாம்.
அப்படி எதையுமே சொல்லாமல் உண்மையைச் சொன்னார்கள்.
இயேசுக்கிறிஸ்துவுக்கு மீன் பிடித்தார்களா இல்லையா என்பது தெரியாமலா கேட்டார். அவருக்கு எல்லாம் தெரியும்.
அவர்கள் வாயிலிருந்து உண்மை வரவேண்டும். அவர்களே ஒத்துக்கொள்ள வேண்டும். தங்களின் சுய பெலத்தில் ஒன்றுமில்லையென்பதை வாயறிக்கை செய்யவேண்டும்.
அதுவே தேவன் உதவி செய்ய வழிவகுக்கும்.
அதுவே அற்புதத்தை தருவிக்கும்.
ஒரு வேளை பொய் சொல்லியிருந்தால் அல்லது உண்மையை மறைத்திருந்தால், அவர்கள் அற்புதத்தை கண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தேவை சந்திக்கப்படாது போயிருக்கும்.

இப்பொழுது இயேசுகிறிஸ்து வலது புறமாக வலையைப் போடுங்களெனச் சொன்னார். அவர் சொல்லுக்கு கீழ்படிந்து வலையைப் போட்டவேளை, திரளான மீன்கள் அகப்பட்டன. இதைப்பார்த்தவுடந்தான் போதுருவின் மூளையில் தட்டியது, கரையில் நிற்பவர் இயேசுக்கிறிஸ்துவென. லூக்கா 5:6-8ல் நடந்த சம்பவங்களும் பேதுருவுக்கு ஞாபகம் வந்திருக்கும்.
சூழ்நிலையும், தேவையும் ஒரு மனிதனின் அறிவையும் அனுபவத்தையும் பின்தள்ளிவிடும்.
இராமுழுதும் மீனகப்படாமல் இருந்ததற்கு இயேசுக்கிறிஸ்துவே காரணமாயிருந்தார். தன்னுடைய பிள்ளைகளுக்கு மீண்டும் ஒரு அனுபவ ரீதியிலான பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். சுயபெலத்தில் எதையும் சாதிக்கமுடியாதென்பதை கற்றுக்கொடுத்தார். அவர்களுடைய அழைப்பை ஞாபகப்படுத்தினார்.
கரையேறும் தனது பிள்ளைகளுக்கான காலை உணவை தயாரித்து வைத்து காத்திருந்தார்.
அவர்கள் வந்ததும், அவர் கையாலெயே பரிமாறினார்.

பிரியமானவர்களே!
ஒன்றுமில்லை என்பது இரண்டு பொருள்படும்.
1. என்னிடம் ஒரு பொருள் கூட இல்லையென்பது.
2. என்னிலென்றுமில்லையென்பது, சுயபெலனைச் சாராத தாழ்மையான சுபாவமாகும். தேவனைச் சார்ந்து வாழுவதாகும்.
அன்று பேதுருவின் படகு காலியாய் இருந்தது போல, இன்று அநேகரின் வாழ்க்கைப் படகும் காலியாகக் கிடக்கிறது. எவ்வளவு பிரயாசப்பட்டும் வாழ்க்கை வெறுமையாகவே கிடக்கிறது. வெறுமையில் குறையிலிருந்து மீளுவதற்காக மீண்டும் மீண்டும் வேலை, உழைப்பென முயற்சிக்கிறார்களே தவிர, கர்த்தரைத் தேடுவதில்லை, அவருக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை.
கர்த்தரின் பாதத்திலமர்ந்து என்னிடமும் ஒன்றுமில்லை, என்னிலும் ஒன்றுமில்லையென உண்மையை அறிக்கையிட்டு ஜெபிப்பதாலேயே, ஆசீர்வாதத்தையும், அற்புதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவனை அறிந்து அவர் வழியில், அவரைச் சார்ந்து, அவரை முன்னிலைப்படுத்தி வாழுவோம்.
கடலில், மீனில் நம்பிக்கை வைக்காது, கர்த்தரில் நம்பிக்கை வைத்து வாழுவோமாக. ஆமென்.

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். நீதிமொழிகள் 28:20
 
நன்றி கர்த்தாவே

த.பிரபா.

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved