ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார்.


ஒவ்வொரு மனிதனும் வளமான வசதியான வாழ்க்கை வாழவே பிரயாசைப்படுகிறான்.
இழப்பதற்க்கும் கொடுப்பதற்கும் மனித மனம் ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை.
தன்னுடைய வளர்ச்சி, தனது எதிர்கால நலன் குறித்தே அதிகமாக சிந்தித்து செயலாற்றும் ஒருவரின் ஆன்மீக வாழ்க்கையின் தேடலும், தனக்கான தேவைகளை பூர்த்தி செய்வதாகவே இருக்கும். ஏன் தேவனைத் தேடுகிறீர்கள்? எதற்காக ஆலயம் போகிறீர்கள் என்ற கேள்விக்கான அவர்களுடைய பதில்: தன்னுடைய வியாதி குணமாகணும், தான் ஆசீர்வதிக்கப்படணும், தன்னுடைய குடும்பம் செழிப்பாயிருக்க வேண்டுமென்பதாயிருக்கும். இப்படிப்பட்ட தேவைக்கும், தீர்வுக்கும், ஆசீர்வாதத்திற்காகவும் கடவுளைத் தேடுபவர்களின் தேவைகள் பூர்த்தியானதும் அதிகமானோர் பின்மாற்றமடைந்து விடுவதை காண்கிறோம்.
சுய ஆதாயத்துக்காக ஆண்டவரைத் தேடாமல் அன்பினால் ஆண்டவரைத் தேட வேண்டும்.

படைப்பாளரை அறித்து கொண்டு, அவர் ஆளுகையின் கீழ் வாழ்ந்து, அவர் வழிகாட்டலில் பயணிப்பதே ஆண்டவரைத் தேடுவதன் உண்மையான நோக்கமாயிருக்க வேண்டும்.
தேவனுக்கு பயந்து, அவருக்கு பிரியமாய் வாழ்ந்து, அவர் சித்தம் செய்வதே ஒவ்வொரு தேவப்பிள்ளையின் இலக்காயிருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர் உறவை வாஞ்சித்து, அவரோடு இணைந்து வாழ ஆசைப்பட வேண்டும். என்னை உண்டாக்கியவர், அவரே எனது தந்தை என்ற உரிமையோடு உறவாட வேண்டும். இவ்வாறு வாழும் பட்சத்தில் பிள்ளைகளாகிய எங்களின் தேவைகள் அனைத்தையும் அவர் பூர்த்தி செய்வார். ஒருவேளை எங்களின் எதிர்பார்ப்புக்கேற்ற விதமாக வாழ்க்கையமையவில்லையென்றால் கூட அது நமது நன்மைக்கானதாகவே இருக்கும்.
தேவ உறவில் நிலைத்திருக்கும் ஒருவருக்கு பாடுகள், இக்கட்டுக்கள், இழப்புக்கள், சோதனைகள் வந்தாலும், தகப்பனின் உறவைவிட்டு ஒருபோதும் பிரியான்.
அவ்வாறு வாழ்ந்த ஒரு மனிதனையே இன்று தியானிக்கப் போகிறோம்.

வேதத்தில் யோபு எனும் பக்திமானைக் குறித்து வாசிக்கிறோம். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அவருக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். அவருக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். (யோபு 1:1-3)

உத்தமன்.
சிறந்த குணநலனை உடையவன். உள்ளதை உள்ளபடி பேசுபவன்.
தவறு செய்திருப்பதை சுட்டிக்காட்டும் பொழுது அதை ஒத்துக்கொள்ளுபவன்.

சன்மார்க்கன்.
தெய்வ நம்பிக்கையுடையவர்களை சன்மார்க்கனென அழைப்பார்கள்.
யோபுவின் வணக்கத்துக்குரிய தெய்வம் யெகோவா தேவனாயிருந்தார்.

தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன்.
தேவன் உயிரோடு இருக்கிறார், அவர் ஒவ்வொருத்தரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார், அத்தேவன் தீங்கு, பாவம், அநீதியை வெறுக்கிறார். ஆகவே அவருக்கு பிரியமில்லாதை செய்யாமல், பிரியாமானதை செய்து வாழ்வதாகும்.

உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகி வாழ்ந்த யோபுவுக்கு ஏழு குமாரரும் மூன்று குமாரத்திகளும் இருந்தார்கள்.
ஏழு குமாரர்களென்பது பூரண ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மிருகஜீவங்களையும் வேலைக்காறரையும் கொண்ட செல்வச் சீமானாயிருந்தார். கிழக்கத்திய பிராந்தியத்தில் யோபுவை மிஞ்சிய பணக்காறரில்லையென்று வேதம் சொல்லுகிறது. ஜலப்பிரளயத்துக்கு பின் வந்த காலப்பகுதியில் வாழ்ந்த யோபு, மனச்சாட்சியின் காலத்தில் ஒரு ராஜாங்கத்தையே நடத்தியிருப்பார். இன்று ஏழாயிரம் பார ஊர்த்தி, மூவாயிரம் தொழிற்சாலை, ஐந்நூறு விமானம், ஐந்நூறு கப்பல் வைத்திருப்பவரை என்னவென்று சொல்லுவீர்கள்?
இப்பேற்பட்ட யோபு தலைக்கனம் கொண்டவராயோ ஏதேச்சதிகாரியாயோ வாழவில்லை. செல்வப் பெருக்கால் பெருமை உள்ள மனிதனாயும் வாழவில்லை.

வேதப்புத்தகம், சபை, பிரசங்கிமார் அற்ற நாட்களில், வாய்வழியாய் கடந்து வந்த சத்தியத்தைக் கேட்ட யோபு தேவனுக்கு பயந்தவராயும், பொல்லாப்புக்கு விலகினவராயும், தேவனை விசுவாசித்தும் வாழ்ந்தார்.
நோவாவின் பிள்ளைகள், ஆதாம் தொடங்கி மெத்தூசலாவரையோரின் வாழ்க்கை வரலாற்றை யோபுவுக்கு சொல்லியிருப்பார்கள். அதில் குறிப்பாய் ஆபேல், சேத், ஏனோக்கு, நோவா போன்றோரின் சாட்சியான வாழ்க்கை யோபுவின் விசுவாசத்துக்கு உதவியிருக்கும்.
யோபு தானது பிள்ளைகளும் தேவனை விவாசித்து, அவருக்கு பயந்து வாழப் பழக்கினார். ஒரு வேளை அவர்கள் பாவம் செய்திருந்தால், தேவ கோபம் வரமுன் பரிகாரமாக சர்வாங்க தகனபலி செலுத்தி அவர்களை பரிசுத்தப்படுத்தினார். இப்படியாக பிள்ளைகளையும் தெய்வ பக்திக்குள் வழிநடத்தி மகிழ்ச்சிகரமாய் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இந்த யோபுவைக் குறித்து பரலோகத்தில் இருக்கும் கர்த்தர், சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். அதற்கு சாத்தான் கர்த்தர் வேலியடைத்து பாதுகாத்து ஆசீர்வதித்ததால், யோபு கர்த்தருக்கு பயந்து வாழுகிறார். அவருடைய செத்துக்கள் உடமைகளை அழிப்பீரானால், யோபு தேவனை திட்டுவாரெனச் சொன்னான். அதற்கு கர்த்தர் அப்படியா? நீ வேண்டுமென்றால் அவரின் உடமைகளையெல்லாம் அழிக்க அனுமதி தருகிறேன். யோபுவின் உடலில் மட்டும் தொடக்கூடதெனச் சொன்னார். சாத்தானும் யோபுவை சோதிக்க புறப்பட்டான்.

சாத்தானானவன் தேவனை மனுசன் வணங்க, விசுவாசிக்க, உறவாடக் கூடாதென நினைப்பவன். அதனாலெயே பல மதங்கள், மார்க்கங்கள், சித்தாந்தங்களை உண்டு பண்ணி உருவாக்கி, ஜீவனுள்ள தேவனை தொழுது கொள்ளாமல் பிரித்து வைத்திருக்கிறான்.
ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கும் மக்களை அழிக்க முயல்வதே அவனின் முழுநேர வேலை. சாத்தனுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியுண்டு. அவன் கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியாகும். ஆகவே குறிப்பிட்டளவு வல்லமையே உண்டு. கர்த்தருக்கு எதிராக புரட்சி செய்ததால் அவன் பூமிக்கு தள்ளப்பட்டவன். அவனுடைய ஆயூள் நாட்கள் கர்த்தரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு கொடுக்கப்பட்ட காலத்துக்குள் கர்த்தருடைய பிள்ளைகளை துன்பப்படுத்துவான். ஆனால் கர்த்தர் அனுமதித்தால் மாத்திரமே அது சாத்தியம். அதையே இந்த யோபுவின் உண்மை சரித்திரத்திலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.

ஒரு நாள் யோபுவின் வீட்டுக்கு ஒரு வேலைக்காறன் பதட்டத்தோடு ஓடி வந்து சொன்னான்: எருதுகளையும், கழுதைகளையும், வேலைக்காறரையும் சபேயர் கூட்டத்தினர் வந்து வெட்டி கொலை செய்து அழித்துப்போட்டார்கள், நான் மட்டும் தப்பி வந்தேனென்று சொன்னான்.
வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,
வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து, நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத்திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்
கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.

சாத்தான் எதிர்பார்த்தது போல யோபு பேசவில்லை, செயல்படவில்லை.
இதிலிருந்து என்ன புரிகிறது?
1. சாத்தானுக்கு எதிர்காலத்தை குறித்த அறிவில்லை.
2. ஒருமனுஷனின் இருதய நினைவுகளை அறிந்து கொள்ளும் ஆற்றல் சாத்தனுக்கில்லை.
இவையிரண்டையும் கர்த்தரால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும், அவரே சர்வஞானி. அவரே சர்வ வல்லமையுடைய தேவன்.

யோபுவின் வாழ்க்கையில் தொடர் இழப்புக்கள் அவரின் ஆன்மாவை உலுப்பியிருக்கும்.
எருதுகள், கழுதைகள், ஆடுகள், ஒட்டகங்கள், வேலைக்காறர்மட்டும் கொலை செய்து அழித்திருந்தால் கூட யோபு தாங்கியிருப்பார். ஆனால் அவரின் பத்து பிள்ளைகளும் ஒன்றும் மிச்சமில்லாமல் இறந்து போனதை அவரால் சகித்துக் கொள்ள முடியாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வெறுங்கையோடு பிறந்தேன், வெறுங் கையோடு மரிக்கிறேன். கர்த்தர் தந்தார் அவற்றை அவரே மீள எடுத்துக் கொண்டாரென நிதானமாகச் சொன்னார். யோபு எலும்பும் நரம்பும் இரத்தமும் சதையுமுள்ள சாதாரண மனிதனே. அவருக்குள் ஆற்றமுடியாத கவலையும் சோகமும் இருந்திருக்கும். ஆனாலும் தனக்குண்டான அனைத்தையும் தேவனே தந்தார். இருந்ததனைத்தும், இழந்ததனைத்தும் கர்த்தருடையவையே.
தன்னுடைய ஆற்றலில் தன்னுடைய உழைப்பில் வந்தவையென்று ஒருபோதும் யோபு சொன்னதேயில்லை.
அதனாலேயே கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தாரெனச் சொன்னார்.

பிரியமானவர்களே!
யோபுவுக்கிருந்த ஐஸ்வரியம் போல் நமக்கிருந்ததுண்டா?
யோபுவுக்கிருந்த மனத்தாழ்மை, தேவபயம், பாடுகள், இழப்புக்கள் நமக்கு வந்ததுண்டா?
இல்லவே இல்லை.
இன்று நிலையான வேலை கிடைத்து, வருவாயும் அதிகரித்து, வசதியான வாழ்கை கிடைத்துவிட்டால் போதும், படைப்பாளரை மறந்து விடுகிறோம். என்னுடைய அறிவு, என்னுடைய உழைப்பு, எனது பணம், எனது வீடு, என்னால் கட்டியெழுப்பப்பட்டவை
என் சுயபெலத்தால் சம்பாதித்தவையென உரிமை பாராட்டுகிறோம்.
தேவன் தனது சாயலில் நம்மை உண்டு பண்ணி, ஆரோக்கியமான சாரீரத்தை தந்து, அறிவு ஆற்றல் ஆளுமையை நமக்கு தந்ததாதோடு, நமது வாழ்க்கைக்கு தேவையான பௌதீக சூழலையும் உருவாக்கித்தத்துள்ளாரென்ற பட்டறிவு அற்றவர்களாயிருக்கிறோம்.
யோபுவை மிஞ்சிய ஐஸ்வரியவான்கள் நாங்களல்ல.
அவருக்கிரிருந்த தேவபயம், உத்தமம், மனத்தாழ்மை நமக்கிருப்பதாக.

பல ஆண்டு விசுவாசிகளாயிருந்த போதும், பாடுகள் இழப்புக்களைச் சந்திக்கும் பொழுது, ஜெபித்தென்ன பலன், வேதம் வாசித்தென்ன பலன், பரிசுத்தமாய் வாழ்ந்தென்ன பலன், சபைக்கு போயென்ன பலன் என்று முறு முறுக்கிறோம். இயேசுக்கிறிஸ்துவோடிருந்த உறவு, ஐக்கியத்திலிருந்து பின்வாங்கிவிடுகிறோம். இதைத் தான் சாத்தான் எதிர்பார்க்கிறான்.
யோபுவை மிஞ்சிய பாடுகள் இழப்புக்களை நாம் சந்திக்கவில்லை. நமக்கு ஏற்படும் பாடுகள் சோதனைகளின் போது கர்த்தரை உறுதியாக பற்றிப்பிடிக்க வேண்டும்.
என்னை உண்டாக்கியவரே, எனக்குண்டானவற்றை தந்தவர்.
நானவற்றை இழக்கும் பொழுது, கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தாரெனச் சொல்லும் மனப்பக்குவத்திற்கு வளர்ந்துவரவேண்டும்.
அழிந்து போகும் உலகப் பொருள், உலக இன்பங்கள் நம்மைவிட்டு கடந்து போனால், அவைகுறித்து கவலைப்படாமல்.
அழிந்து போக தேவ உறவையும், அவருடைய ஆளுகையையும், வழிநடத்துதலையும் இழந்து போகாமல் காத்துக்கொள்ளுவோமாக.
யோபுவைக்குறித்து கர்த்தர் சாட்சி சொன்னது போல எங்களைக் குறித்தும் நற்சாட்சி சொல்லுவாராக. ஆமென்.

ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1:29

நன்றி கர்த்தாவே.

த. பிரபா

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved