ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

ஒன்பது போரும் எங்கே?


குஷ்டரோகம் எனும் தொழு நோயைக் குறித்து நாற்பது தடவைக்கு மேல் பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. லேவியராகமம் 13ம் அதிகாரத்தில் இந்த நோய் குறித்த அறிகுறி, பரிகாரம், பாதிப்புக்குள்ளானவரின் செயல்பாடு குறித்து விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வைத்தியசாலை மருந்துகளற்ற அன்நாட்களில் எவ்வாறு வாழ வேண்டும், நோயை எதிர்கொள்ள வேண்டுமென கர்த்தர் சொல்லிக்கொடுத்தார். குஷ்டரோகம் குறித்த அறிவு ஆசாரியனுக்கு கொடுக்கப்பட்டிருந்ததால், அவரே நோயாளியை நியாயம் தீர்ப்பார்.
இன்நோயால் பாதிக்கப்பட்டோர், நோய் குணமடையும் வரை தனிமைப்படுத்தப்பட்டு ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.
அவர் தன்னை தீட்டு தீட்டு எனச் சொல்ல வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு அநீதி போலத் தெரியும். தேவன் நல்ல நோக்கத்தோடு, பாதிப்புக்குள்ளானவர் நலன் கருதியும், பிறர் பாதிக்கப்படாமலிருக்கவுமே சட்டதிட்டங்களை கொடுத்தார். காலப்போக்கில் குஷ்டரோகிகளை சமூகம் புறக்கணித்து, தீண்டத்தகாதவர்கள் போலாகிவிட்டது.
லேவியராகமம் 14:1-7 ல் உள்ள பகுதிகளை வாசிக்கும் பொழுது, குஷ்டரோகிகள் மீது கர்த்தர் கொண்ட உண்மையான கரிசனை புரியும்.

இன்நோயானது பக்ரீரியாக்களின் தக்குதலால் உருவாகிறதென்பதை, முதன் முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கொரார்டு ஆன்சன் என்பவர் கண்டுபிடித்தார்.
இந்த பக்ரீரியாக்கள் தோல், நரம்பு, விரல்கள், மற்றும் கண்களைத் தாக்கும்.
தோலில் தேமல் போல் படர்வதும், தோலின் நிறம் மாறுவதும், விரல்கள் மற்றும் பாதங்களில் உணர்ச்சியீன்மையும் காணப்படுவதே இன்நோய்க்கான அறிகுறியாகும். மோசமான பாதிப்புக்குள்ளானவர்களின் விரல்கள் உதிர்ந்து போவது போல காட்சிதரும், சீழ், துர்நாற்றம் போன்றன வெளிவரும்.
தொழுநோயுள்ளவரோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்களுக்கும், நெருங்கிப் பழகுவோருக்கும் இன்நோய் தொற்ற வாய்ப்பதிகம்.
எயிட்ஸ் நோய்க்கு அடுத்த நிலையில் தொழுநோயிருப்பதாக வைத்தியர் ஒருவர் சொல்லக் கேட்டேன்.
விஞ்ஞான வளர்ச்சியற்ற, பரிசோதனைக் கூடமற்ற, இரத்தப்பரிசோதனையற்ற, நுண்காட்டி, வைத்தியர்களற்ற காலத்திலேயே, தேவன் வியாதிகளின் கொடுரத்தை அறிந்து அதற்கேற்ப வாழ கற்றுக்கொடுத்தார்.
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.
பிச்சைக்காரர்கள் கூட, குஷ்டரோகிகள் கூட இருந்து பிச்சையெடுப்பதற்கு விரும்ப மாட்டார்களாம். அந்தளவுக்கு ஒதுக்கிவைத்த நபரை இயேசுக்கிறிஸ்து தனது சொந்த கரங்களால் தொட்டு சுகமாக்கினார். (மத்தேயு 8:3). அவர் தனது சொந்த குமாரனாக, தனது சொத்தாக கருதி நேசித்தாலேயே, குஷ்டரோக நோய்வாய்பட்டவரைக் கண்டு அருவருக்காமால், தீட்டென புறக்கணிக்காமல் தொட்டு (கட்டியணைத்து) சுகமாக்கினார். இன்றும் எவ்வளவு பெரிய பாவியாயிருந்தாலும், மனந்திரும்பி இயேசுக்கிறிஸ்துவிடம் வரும் பொழுது, கட்டியணைத்து முத்தம் செய்து அவரண்டை சேர்த்துக் கொள்ள ஆவலாய் உள்ளார்.

லூக்கா 17: 12-19 வரையான வேதப்பகுதியில் பத்துக் குஷ்டரோகிகளைக் குறித்து வாசிக்கலாம். இப்பத்துக் குஷ்டரோகிகளும் இயேசுக்கிறிஸ்துவிடம், தங்களைக் குணப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறார்கள். இயேசுக்கிறிஸ்து, ஆசாரியனிடம் போய் காட்டும்படி சொன்னார். அவர்கள் போகும் வழியில் குணமானார்கள். குணமானவர்களில் ஒருவர் இயேசுக்கிறிஸ்துவிடம் திரும்பிவந்தார்.
இக்கதையை பிரசங்கிக்கும் அநேக போதகர்மார் (எல்லோருமல்ல) இயேசுக்கிறிஸ்துவிடம் திரும்பி வந்த குஷ்டரோகி நன்றியுள்ளவனெனக் கூறி, இறுதியில் போதகருக்கும் சபைக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டுமென வலியுறுத்துவதை கேட்க கூடியாமாதிரி உள்ளது. ஒரு தேவப்பிள்ளையை இயேசுக்கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவனாய் வாழ வளர்த்துவிட்டால் போதும், அந்த தேவப்பிள்ளை குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், சபைக்கும், போதகருக்குமென அனைவருக்கும் நன்றியுள்ளவராயிருப்பான்.

பூமியில் உள்ள ஒவ்வொருவரும் உதவிகளை, நன்மைகளை உறவுகளிடமிரிந்தும் பிறரிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் பெற்றே வாழ வேண்டிய தேவையுள்ளது. எவரொருவரிடமிருந்தும் எந்தவிதமான உதவிகளையோ நன்மைகளையோ பெற்றிடவில்லையென யாரும் சொல்லிவிட முடியாது.

1. நன்மைகளைப் பெற்றதும் உடனடியாக நன்றி மறப்பது.
    இவர்கள் பக்கா சுயநலவாதிகளாயிருப்பார்கள்.
2. நன்மைகளைப் பெற்றதும் குறிப்பிட்ட காலத்துக்கு நன்றி உணர்வோடு இருப்பது.
    இவர்கள் நிகழ்காலத்தில் உதவுபவர்களையே உயர்த்திப்பிடிப்பார்கள்.
3. எக்காலத்திலும் நன்றிமறவாதவர்கள். இவர்கள் தெய்வீக சுபாவம் கொண்டவர்கள்.

ஒரு தாய் தனது மகன் திருமணமானதும், தான் கஷ்ரப்பட்டு வளர்த்ததையெல்லாம் நன்றி மறந்து, தன்னை பராமரிக்காது, அன்பு செலுத்தாது தனிக்குடித்தனம் போய்விட்டானெனச் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
ஒரு நண்பன் தனது நண்பனின் வியாபாரத்துக்கு பண உதவி செய்து அவனை முன்னேற்றி விடுகிறான், வியாபாரத்தின் மூலம் பணக்காரனாகியதும், அவன் நண்பனை அசட்டை பண்ணி, அற்பமாக பார்க்கும் போது, நண்பன் நன்றி மறந்து விட்டாரென ஆரம்பத்தில் உதவியவர் வருத்தப்படுவதை கண்டிருப்பீர்கள்.
ஒரு மருமகள் தனது மாமியாரையும் மாமனாரையும் சிறப்பாக பராமரித்த போதும், செய்நன்றி மறந்து அவர்களின் சொத்துக்களை மகளின் பெயருக்கு எழுதி வைத்துவிட்டார்களென புலம்புவதையும் கேட்டிருப்பீர்கள்.
பலர் இணைந்து பிரயாசைப்பட்டு ஒரு ஊழியத்தைக் கட்டுவார்கள். அவ்வூழியமானது வளர்ந்து நிலைத்து நிற்கும் பொழுது, ஒருவர் உரிமை கொண்டாடி அதிகாரத்தை முழுமையாக கையிலெடுப்பார். அப்பொழுது அதிகாரத்தைப் பிடித்தவரைப்பார்த்து நன்றியற்று செயல்படுகிறாரென வருத்தப்படுவார்களையும் பார்த்திருப்பீர்கள்.

ஒரு தடை தாண்ட, ஒரு இக்கட்டிலிருந்து தப்பிக் கொள்ள, ஒரு நிலை உயர இன்னொருவரின் உதவி அவசியமாக தேவைப்படுகிறது. அத்தடை தாண்டியதும், நெருக்கடியிலிருந்து தப்பிக் கொண்டதும், இலக்கையடைந்ததும் விரல்விட்டெண்ணக் கூடிய ஒரு சிலரே நன்றி மறவாதிருப்பார்கள்.
பத்துக் குஷ்டரோகிகளின் கதையும் அதையே எடுத்தியம்புகிறது.
நன்றி மறந்த சுயநலவாதிகளைக் குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் உயர உயர முன்னைய நிலையை மறக்கும்
குணம் மனிதனுக்கு இயல்பாகவே உள்ளது.
உலக ஒழுங்கே தனக்கானதை தேடி, அதைப்பெற்று வாழும் சுயநலக் கட்டமைப்பிலெயே இயங்கிக் கொண்டிருக்கிறது.

பத்துக்குஷ்டரோகிகளை குணமாக்கியபோதே இயேசுக்கிறிஸ்துவுக்கு தெரியும் ஒருவன் தான் தன்னை தேடிவருவானென.
அப்படியென்றால் எதற்காக ஒன்பது பேரும் எங்கேயென அவர் கேட்க வேண்டும்?
அதையே சுருக்கமாக தியானிக்கப் போகிறோம்.

நாசரேத்தூரில் வாழ்ந்த இயேசுக்கிறிஸ்து அநேக அற்புதங்களைச் செய்தாரென பத்துக்குஷ்டரோகிகளும் அறிந்திருந்தார்கள். தங்களுடைய வியாதியை குணமாக்கவும் அவராலேயே கூடுமென விசுவாசித்தார்கள்.
இயேசுக்கிறிஸ்து பயணப்பட்டுப் போகும் வழியை பார்த்துக் காத்திருந்தார்கள்.
அவர்கள் எதிர்ப்பர்த்திருந்தவரைக் கண்டதும், அவருக்கு எதிரே சென்று, தூரத்திலே நின்று, எங்களுக்கு இரங்குமென கத்தினார்கள். அப்பொழுது இயேசுக்கிறிஸ்து அவர்களுக்காக ஜெபிக்கவில்லை, குணமாகும்படி கட்டளையிடவில்லை, மாறாக ஆசாரியனைப் போய்ப் பார்க்கும்படி கூறினார். (அவர்கள் எப்போ விசுவாசித்தார்களோ, அப்பவே குணமாகிவிட்டார்கள். நோயின் தாக்கம் நின்றிருக்கும்) அவர்களும் இயேசுக்கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து எருசலேமை நோக்கி நடந்தார்கள். பல கனவுகள் கற்பனைகளோடு நடந்து கொண்டிருந்த போது, சரீர அவையங்களில் மாறுதல் உருவாகுவதை உணருகிறார்கள். அணிந்திருந்த ஆடைகளை விலக்கு கை கால்களைப் பார்த்த போது என்ன ஆச்சரியம், குஷ்டரோகமிருந்த இடமே தெரியாமல் போயிருந்தது. இப்பொழுது ஒன்பது பேர் ஓட்டமும் நடையுமாக வேகமாக ஆசாரியனைப் பார்க்க சென்றார்கள். அவர்கள் மனசில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்த ஆனந்தத்தில், குடும்பம், உறவுகள், பிள்ளைகள், அயலகத்தாரையெல்லாம் பார்க்கலாமென்ற கற்பனையில் மிதந்தவாறு எருசலேமை நோக்கிப் பயணித்தார்கள்.

ஒன்பது பேரோடு கூடிப் போகாத பத்தாவது நபராகிய சமாரியன். ஒரு நிமிடம் நிதானித்து, தன்னுடைய சரீரத்தை நன்றாக பார்த்து குணமானதை கண்டு அழுதான். தன்னை சுகமாக்கிய இயேசுவுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லவில்லையே என மனவருத்தப்பட்டு இயேசுவை தேடி நடக்க ஆரம்பித்தார். இவனுடைய எண்ணமெல்லாம் இயேசுக்கிறிஸ்துக்கு எப்படி நன்றி சொல்லுவேன், அவருக்கு கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லையே என்ற கவலையோடு அவரைத் தேடி அவர் சென்ற வழி நோக்கி போனான்.
ஒன்பது பேர் ஒரு திசையில் பயணிக்க, மிஞ்சிய ஒருவனோ அவர்களின் எதிர்த்திசையில் பயணப்பட்டான்.

இயேசுக்கிறிஸ்துவை கண்டவுடன், அவர் பாதத்திலமர்ந்து கதறி அழுதான். இனிமேல் வாழ்க்கையே இல்லை, மீட்பேயில்லை என்றிருந்த தனக்கு வாழ்வழித்துவிட்டீர்களென சொல்லி அழுதிருப்பார். காலில் விழுந்து நன்றி நன்றியென உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லியிருப்பார். அத்தோடு இயேசுக்கிறிஸ்து தான் மெய் தேவனென கனப்படுத்தியுமிருப்பார்.

அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அன்னியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

நன்றி மறவாதவராய், இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து தேடி ஓடி வந்ததால், சமாரியனுக்கு இரட்சிப்பு கிடைத்தது. பாவ அடிமைத்தனத்திலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து விடுதலை கிடைத்தது. இயேசுக்கிறிஸ்துவால் பாவமன்னிப்பு பெற்று மீட்க்கப்பட்டான். கிறிஸ்துவுக்கு பிள்ளையானதோடு, நித்திய வாழ்வுக்கு தகுதியுடையவனான்.
இந்த இரட்சிப்பை மற்ற ஒன்பது பேரும் பெற்றுக் கொள்ளாது போனார்களே என்ற ஆதங்கமே, மீதி ஒன்பது பேரும் எங்கே என இயேசிக்கிறிஸ்துவை கேட்க வைத்தது, அவர்கள் திரும்பிவரக்காணோமே என வருத்தப்படவும் வைத்தது.

பிரியமானவர்களே!
சரீர சுகத்துக்காக அல்லது நாளாந்த தேவைகளுக்காக ஜெபியுங்களென கேட்கும் அநேகர் அத்தேவை பூர்த்தியானதும், வியாதியிலிருந்து விடுதலை கிடைத்ததும், சபைக்கு போவதை, வேதம் வாசிப்பதை, ஜெபிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். தற்காலிகமான சரீர விடுதலையை உலக வாழ்க்கையை மட்டும் கருத்தில் கொள்ளாமல். நித்திய ஜீவனை சுதந்தரித்து, இயேசுக்கிறிஸ்துவுக்கு பிள்ளையாக ஜீவிக்க வேண்டுமென ஆசைப்பட வேண்டும். அதற்கு, இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து, அவர் மூலம் பாவமன்னிப்பை பெற்று இரட்சிப்பை பெற்றுக்கொள்வது அவசியமானது.
இதுவே நமது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாயிருக்க வேண்டும்.
சாதாரண சரீரசுகம், நெருக்கடிகளற்ற இயல்பு வாழ்க்கை போதுமென்றிருக்காது. அவற்றைத் தந்த இயேசுக்கிறிஸ்துவை பற்றிப் பிடித்து சொந்தம் கொண்டாட வேண்டும். அதுவே இம்மைக்கும் மறுமைக்குமான நிரந்தர தீர்வாகுமென்ற உண்மையை அறிந்து, அதற்காக பிரயாசைப்படுவோமாக.

நன்றி உணர்வற்றிருப்பார்கள், தீமை செய்வார்களென தெரிந்தும், அவர்களுக்கு இயேசுக்கிறிஸ்து நன்மை செய்தார். இந்த தெய்வீக சுபாவத்தை உடையவர்களாய் நாமிருப்போம். பிரதியுபகாரத்தை, நன்றியை எதிர்பாராது, தீமை செய்வோர்க்கும் நன்மை செய்வோம். நன்மை செய்வதை மூலதனமாக கருதாமல் கடமையாக கருதுவோம்.

அனுதினமும் நன்மையானவைகளைத் தந்து, எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இயேசுக்கிறிஸ்துக்கு, அனுதினமும் நன்றி சொல்லி, ஸ்தோத்தரித்து, ஆராதித்து, அவர் பாதத்திலமர்ந்து ஜெபித்து அவர் நாமத்தை மகிமைப்படுத்தி, நன்றி மறவாது வாழுவோமாக. ஆமென்.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12 

நன்றி கர்த்தாவே.

த. பிரபா.
 

 

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved