ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

தாய்ப்பாசம்.


கர்ப்பமாயிருக்கும் பெண், கருவில் வளரும் தனது குழந்தை ஆரோக்கியமாயிருக்க வேண்டுமென எண்ணி ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணத் தொடங்கிவிடுவாள்.
அத்தாயானவள் பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதிலும், அப்பிள்ளையின் சரீர வளர்ச்சியிலும் கண்ணும் கருத்துமாயிருப்பாள். பிள்ளை அழும்போதெல்லாம், பசியால் அழுவதாக எண்ணி உணவூட்டவே முயற்சிப்பாள். பிற பிள்ளைகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு தன்பிள்ளையின் வளர்ச்சியின் அளவு சரியாயிருக்கிறதாவென அறிந்து கொள்ளவும் ஆர்வமாயிருப்பாள். பிள்ளைகள் கேட்கும் உணவெல்லாவற்றையும் சலிக்காமல் செய்து கொடுக்கும் தாய்மாரும் உண்டு.
சில தாய்மார் உணவை உண்டாக்க செலவு செய்யும் நேரத்தைக்காட்டில், உணவு ஊட்டுவதில் அதிகமான நேரத்தை செலவு செய்வார்கள்.
பாடசாலை போய் திரும்பும் பிள்ளை பசியோடு வருமென்றெண்ணி, வழி வழியே உணவூட்டும் தாய்மாரும் உண்டு.
தான் சமைத்த உணவை உடன் சாப்பிடாத தாய், தன்பிள்ளைகள் உண்டதும், மிச்சம் மிகுதியை உண்ணும் மனப்பக்குவம் கொண்டவளாயிருப்பாள்.
தன்வயிற்றை வெறுமையாக்கி பிள்ளைகளை வளர்க்கும் தாய்மார்கள் அநேகம் பேர் உண்டு.
பிள்ளைகளுக்கு வியாதி வந்துவிட்டால், அவ்வியாதி மாறுவதற்காக உபவாசமிருந்து ஜெபிப்போர்கள் அநேகமானோர் உண்டு.
பிள்ளை தூரதேசம் போய்விட்டால், மகன் சாப்பிட்டான? இல்லையாவென தனக்குத் தானே கேள்வி கேட்டு புலம்பும் தாய்மாரும் உண்டு.
பிள்ளைகளுடன் தொலைபேசியில் பேசும் பொழுது, முதல் கேள்வி சுகமாயிருக்கிறியா மகளே என்பதாயிருக்கும், இரண்டாவது கேள்வி சாப்பிட்டியா மகளே என்பதாயிருக்கும்.

இப்படிப்பட்ட பாசம், கரிசணை, தியாக உணர்வு போன்றன கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் சுபாவமாகும்.
தேவசாயலில் சிருஷ்டித்ததன் மூலம் இப்படிப்பட்ட நல்ல சுபாவங்களை பெற்றுக்கொண்டோம்.
மாம்சப்பிரகாரமான தாயின் பாசம் கூட கூடிக் குறையும். கடைசிப் பிள்ளையை, பெண்பிள்ளையை, குடும்பத்துக்காக உழைத்த பிள்ளைகளையே அதிகமாக நேசிப்பார்கள்.
ஆனால் நம்முடைய பரம தகப்பன் அவ்வாறில்லை. அவர் எல்லோரையும் ஓரேமாதிரியே நேசிக்கிறார். அவர் பாரபட்சம் பாகுபாடு காட்டுவதில்லை. எங்களிடம் ஒரு நன்மையுமில்லாத போதும் எங்களை நேசித்து அனுதினமும் போஷிக்கிறார்.
உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டிக்குட்டியென்று வேதம் சொல்லுகிறது. (வெளி 13:8) இதன்படி பார்த்தால் நாம் உண்டாக்கப்பட முன்னரே எங்களை நேசித்தது நிரூபனமாகிறது. அவர் மனுசனின் தேவைக்கு ஏற்ற அனைத்தையும் உண்டாக்கிவிட்டே மனிதனை உண்டாக்கினார். இஸ்ரவேலரை எகிப்த்திலிருந்து அழைத்து வந்த போது, அவர்கள் நற்பதாண்டுகள் உழைக்காமல் சாப்பிட்டார்கள். (நெகேமியா 9:15, 21)
கொடிய பஞ்ச நாட்களிலும் தனது பிள்ளைகளை குறைவின்றி போஷித்தார்.

இயேசுக்கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில், அவர் செய்த முதலாவது அற்புதமே கல்யாண விருந்து வீட்டில் ஏற்பட்ட திராட்சரச குறைவை நிறைவாக்கியதேயாகும். (யோவான் 2:3-10)
யோவான் 4ம் அதிகாரத்தில் சமாரிய ஸ்திரியை இயேசுக்கிறிஸ்து சந்தித்த கதையை வாசிக்கிறோம். சீஷர்கள் எல்லோரும் சாப்பாடு வாங்குவதற்காக ஊருக்குள் போனதாக எழுதப்பட்டுள்ளது. பல மைல் நடந்து பசியோடும் களைப்போடுமிருந்த சீஷர்களை ஊருக்குள் போய் சாப்பிட்டுவிட்டு, அதன்பின் தனக்கு போஜனத்தை வாங்கிவரும்படியே அனுப்பியிருப்பாரென்று நான் கருதுகிறேன்.
தனது போதனையை கேட்கவந்த மக்கள் வெறுவயிற்றோடு போகக் கூடாதென எண்ணி, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கொடுத்த சம்பவத்தை மத்தேயு 14:19ல் வாசிக்கிறோம்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தாய், தந்தையைர் போன்றோரும் இருந்தனர். அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு அந்த இடத்தில் ஆகாரம் கொடுக்கமுடியவில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து மனதுருகி அவர்களின் வயிற்றுப் பசிக்கு போஷித்தார். அந்த இடத்தில் யாரும் இயேசுக்கிறிஸ்துவிடம் வந்து உணவு தரும்படி கேட்கவில்லை.
அவரே அவர்களின் நிலையை பார்த்து, அவர்கள் மீது கரிசனை கொண்டு, தனது பாசத்தை அக்கறையை வெளிப்படுத்தினார். பிரதியுபகாரம் எதுவும் எதிர்பார்க்காது இலவசமாய்க் கொடுத்தார்.

இயேசுக்கிறிஸ்து மரித்து உயித்தெழுந்ததன் பிற்பாடு, சீஷர்கள் மீன்பிடிக்கப் போனதை யோவான் 21ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். மேய்ப்பனற்று இருக்கும் ஆடுகளைப் போலிருந்த சீஷர்கள், உயிர்வாழுவதற்காக, தமது பழைய தொழிலுக்கு திரும்ப தீர்மானித்தார்கள். அன்று பணப்பையை வைத்திருந்த யூதாஸ்கரியோத்து உயிரோடில்லை, அவர்கள் கையில் பணமும் இருக்கவில்லை, பிறரிடம் காணிக்கையோ, கடனோ வாங்கவும் அவர்களுக்கு விருப்பமுமில்லை, அதற்கு முயற்சிக்கவுமில்லை.
ஆகவே உழைத்து சம்பாதித்தால் தான் பசியை போக்க முடியுமென்ற நிலையில் கடலுக்கு போனார்கள்.
அப்படிக் கடலுக்கு போனவர்களை, கரையில் நின்று இயேசுக்கிறிஸ்து சந்தித்ததையும் வேதத்தில் வாசிக்கிறோம். அவர் கரையில் சும்மா நிற்கவில்லை. சீஷர்களுக்கு தேவையான காலை உணவை தயாரித்து, அவர்கள் வந்ததும் போஜனம்பண்ண வரும்படி கேட்டுக் கொண்டார். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

பல நாட்களாக வேளா வேளைக்கு உணவை உட்கொண்டிராத சீஷர்களின் நிலையை அறிந்த இயேசுக்கிறிஸ்துவானவர். சீஷர்கள் இரவிரவாக கடலில் தொழில் செய்து சரீர பெலவீனத்தில் இருந்ததையும் நன்குணர்ந்திருந்தார். அவர்கள் சரீரத்தில் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்திலேயே அப்பத்தையும் மீனையும் தயார்படுத்தினார். தன்னுடைய சொல் கேட்காமல் பின்மாற்றமடைந்து போய்விட்டார்களே என அவர் கோபிக்கவில்லை, கரையேறியதும் கண்டித்து பேசவில்லை, இவ்வளவுதான விசுவாசமென்று நறுக்காய் நாலு கேள்வியும் கேட்கவில்லை. மாறாக ஒரு விருந்தாளியை, ஒரு பிள்ளையை அழைப்பதுபோல் போஜனம் பண்ண வாருங்களென்றழைத்தார்.
மகிமையின் ரூமமெடுத்திருந்த சர்வவல்லமையுள்ள தேவன், தனது பிள்ளைகளின் ஆகாரத்தை தனது கையாலேயே சமைத்துக் கொடுத்தார். அவர்கள் பசிக்கிறது உணவை தயாரித்து தரும்படி இயேசப்பாவிடம் கேட்கவில்லை. கேட்காமிலிருக்கும் போதே தேவையறிந்து தேடிச் சென்று உதவுபவரே இயேசப்பா. சொந்த பிள்ளையாக நேசிப்பதால், தகப்பன் தன் பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்கிறார்.

சீஷர்களின் எதிர்கால பாடுகள், நிந்தைகள், பட்டிணிகள், அடிகள், எதிலியான வாழ்க்கை போன்றனவற்றையும், இறுதியில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதையும் இயேசுக்கிறிஸ்து முன்னறிந்திருந்தார்.
ஒரு தாய் தூர தேசம் போகப்போகும் பிள்ளையை பார்த்து, இனி எப்பொழுது பிள்ளைக்கு சமைத்துக் கொடுப்பேனோ, எப்பொழுது மறுபடி பார்ப்பேனோ என்ற தவிப்பில் பணி செய்வாளோ. அதைவிட பலமடங்கு மேலாக தனது பிள்ளைகள், தனது பணிக்காக உயிரை விடப்போகிறர்கள், பாடுகள் அனுபவிக்கப் போகிறார்களென்ற உணர்வோடே இயேசப்பா (உலகத்திலிருந்த போது) உணவை தயாரித்து பரிமாறியிருப்பாரென்றே நான் கருதுகிறேன்.

பிரியமானவர்களே!
உலகத்தில் உள்ள எல்லா தாய் தகப்பன்மாரும், தமது சொந்த பிள்ளைகளை அதிகமாக நேசித்து அவர்கள் தேவைகளைப் போஷித்து பாசத்தோடு வளர்ப்பார்கள்.
இயேசப்பாவின் பிள்ளைகள், உலகத்தில் உள்ள அத்தனை பிள்ளைகளையும் தமது சொந்தப் பிள்ளையாக நேசித்து அவர்கள் தேவைகளைப் போஷித்து பாசத்தோடு உறவாடுவார்கள்.
கிறிஸ்துவின் ஆவியானது எங்களை பிறர்மீது கரிசனைப்படவைத்து அவர்களுக்கு உதவ அகத்தூண்டுதலை தரும்.
பக்திமானென்று வேஷம் போட்டு, பரிசுத்தவான் என்று கோஷம் போட்டு வாழும் வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கையல்ல.
இயேசுக்கிறிஸ்துவே ஒரு சமையல்காறராய், ஒரு பணிவிடைக்காறராய் பணி செய்து, தனது உண்மையான பாசத்தை வெளிப்படுத்தினார். அவர் பிள்ளைகளான நாங்கள்.
எங்கள் கண்முன்னே ஒருவேளை உணவற்று குடல் சுருங்கி, வயிறோட்டி, நாவறண்டு வாழும் உறவுகளைத் தேடிச் சொன்று போஷிப்போம்.
பிள்ளைகளை பிரசவித்தால் மட்டுந்தான் தாயென்றல்ல. எங்கள் இதயக்கதவுகளைத் திறந்து, திக்கற்றவர்கள் அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை போஷிப்போமாயின் நானும் நீங்களும் ஒரு தாயுள்ளம் கொண்டவராய் இருப்போம்.

நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. யோவான் 17:16.

நன்றி கர்த்தாவே.

த. பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved